அடச்சீ… இந்த காலத்திலும் இப்படி ‘சித்தீ’ கொடுமையா? குழந்தையை கொன்று போட்ட கொலைகாரி!

kidnapped girl deepthisri1 - 2026

சிறுமி தீப்திஸ்ரீயின் சோக முடிவு காகிநாடா மக்களை உலுக்கி எடுத்துள்ளது. தீப்திஸ்ரீயின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

காகிநாடாவில் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி தீப்திஶ்ரீயின் கதை சோகத்தில் முடிந்தது. உப்புடேறு என்ற நதியில் சிறுமியின் உடலை வெளியில் எடுத்த தர்மாடி சத்தியம் குழுவினனர் மன பாரத்தால் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ட்ராஜடிக்குக் காரணம், சிறுமியைக் கொன்று மூட்டை கட்டி உப்புடேறு நதியில் வீசி எறிந்த சித்தி தான்!

கிழக்கு கோதாவரி மாவட்டம் காகிநாடாவில் காணாமல் போன சிறுமியின் உடல் மூட்டையாக கண்டெடுக்கப்பட்டது. உப்புடேறுவில் தேடலைத் தொடங்கிய தர்மாடி சத்யம் குழு நேற்று, திங்கள் மதியம் சிறுமியின் உடலைக் கண்டு பிடித்தனர்.

தீப்தியைக் கொன்று மூட்டைகட்டி உப்புடேறுவில் யாரோ தூக்கி எறிந்துள்ளதாக அவர்கள் தீர்மானத்துக்கு வந்தனர். பின்னர், சிறுமியின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். மூன்று நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய ‘காணாமல் போன சிறுமியின் பரபரப்புச் செய்தி, சோகத்தில் முடிந்தது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!
kidnapped girl deepthisri - 2026

காகிநாடா ‘பகடால வேட்ட ‘ என்ற பகுதியைச் சேர்ந்த சத்ய ஷ்யாம் குமார், சத்யமணி இருவரும் தம்பதிகள். தீப்திஸ்ரீ அவர்களுக்கு ஒரே மகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சத்தியமணி உடல் நலமின்றி இறந்து போனார்.

ஷ்யாம்குமார் இரண்டாவதாக சாந்திகுமாரியை மணந்தார். அவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். ஏழு வயது தீப்திஶ்ரீ உள்ளூர் அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள்.

மூன்று நாட்கள் முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமியை மதியத்திலிருந்து காணவில்லை. பள்ளியருகில் விசாரித்த சிறுமியின் தந்தை, மகளை யாரோ கடத்தி விட்டதாக போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஒரு பெண்மணி வந்து தீப்திஶ்ரீயை பள்ளியிலிருந்து அழைத்து சென்றதை கண்டறிந்தனர்.

அதனால் தன் மனைவி சாந்திகுமாரி மீது சந்தேகம் வெளிப்படுத்தினார் ஷியாம் குமார். தன் கணவன் முதல் மனைவியின் மகள் மீது அதிக அன்பு செலுத்துவதாக குற்றம் சாட்டி தீப்திஶ்ரீயை சித்திரவதை செய்து வந்தாள் சாந்திகுமாரி.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டி வந்தாள். சிறுமியின் உடலில் சிற்றன்னை பல முறை சூடு போட்டுள்ளாள். போலீசார் விசாரணையில் சாந்திகுமாரி குற்றத்தை ஒப்புக்கொண்டாள்.

பள்ளியில் இருந்து சிறுமியின் முகத்தை மறைத்து அழைத்துச் சென்றதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்தனர். வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தில் டவலைச் சுற்றி இறுக்கிக் கொன்று உடலை சஞ்சய் நகரிலிருந்து பைக் மீது இந்திராபாலம் பிரிட்ஜ் அருகில் எடுத்து வந்து உப்புடேறுவில் வீசி எறிந்ததாக ஒப்புக் கொண்டாள்.

நதியில் இருந்து உடலை மீட்டு எடுக்க போலீசார் தர்மாடி சத்யம் குழுவினரின் உதவியை நாடினர். 15 பேர் கொண்ட குழு ஞாயிறு முதல் உப்புடேறு நதியில் தேடுதல் வேட்டையில் இறங்கி திங்கள் மதியம் உடலை வெளியே எடுத்தனர்.

குழந்தை தீப்தியை எண்ணி தந்தையோடு கூட உறவினர்களும் உள்ளூர் வாசிகளும் கண்ணீர் விட்டு கதறினர்.

தன் மனைவியை நடுரோடில் வைத்து தூக்கிலிடும்படி சிறுமியின் தந்தை கதறினார். தாயற்ற மகளை கவனித்துக் கொள்வாள் என்று மறுமணம் செய்து கொண்டேன். இப்படி கொடூரமாக கொன்று விட்டாளே பாதகி என்று அழுது துடிக்கிறார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories