December 6, 2025, 6:23 PM
26.8 C
Chennai

எல்லையில் வீரத்துடன் போராடினார்; மனைவியிடம் தோல்வி அடைந்தார்! ஜவானின் பரிதாப மரணம்!

jawan died - 2025

எல்லைக் காவலில் வீரத்தோடு போராடிய ஜவான் மனைவியிடம் தோல்வி அடைந்தார். சித்தூரில் நிகழ்ந்துள்ள சோகமான நிகழ்வு இது…

நாட்டு எல்லையில் உயிரைப் பணயம் வைத்து போராடிய வீர ஜவான் வீட்டில் மனைவியிடம் தோற்றுப்போனார். மனைவியின் கடினமான சொற்களுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தீவிரமான மன வேதனைக்கு ஆளாகி கையில் இருந்த ரிவால்வரால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தேறியது.

பார்டரில் பகைவர்களோடு வீரத்தோடு போராடி தன் சாமர்த்தியத்தைக் காட்டிய வீர ஜவான் மனைவியை வெற்றிகொள்ள இயலாமல் குடும்ப கலகங்களுக்கு பலியாகிப் போன சோக சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

தினமும் சண்டையோ சண்டை போட்டு விவாதத்தில் ஈடுபட்டு எரிச்சலடையச் செய்த மனைவியால் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் ஒரேடியாக மயானத்திற்கு சென்று ரிவால்வரால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்!

கேனீபல்ல மண்டலம் கர்னெமிட்டா பஞ்சாயத்து எல்லைக்குள் வரும் கொண்டாரெட்டிவாரி பல்லெம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்தராமு (49) பார்டரில் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ல் (பிஎஸ்எஃப்) பணியாற்றி ரிடையர் ஆனார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெற்ற சித்தராமு குடும்பத்தாரோடு திருப்பதியில் உள்ள சுந்தரையா நகரில் வசித்து வருகிறார். அவருக்கு மனைவி சாரதா, இரு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் இன்டர் படிக்கிறான். மற்றொரு மகன் டிகிரி படிக்கிறான். ஆனால் சித்தராமுவுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி விவாதங்கள் நடந்து வந்தன.

முந்தைய நாள் இரவு கூட மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடினமான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாக தெரிகிறது. நள்ளிரவில் வீட்டில் இருந்து வெளியேறிய சித்தராமு சற்று தொலைவில் இருந்த மயானத்திற்குச் சென்று அங்கு தன் ரிவால்வரால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

விடியற்காலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அடையாளம் கண்ட உள்ளூர்வாசிகள் வீட்டாருக்கும் போலீசாருக்கும் செய்தி தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடல் அருகிலேயே மது கலந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலும் ரிவால்வரும் கிடந்தன. மனைவியோடு ஏற்பட்ட சண்டையால் நள்ளிரவில் மயானத்திற்கு வந்த ஜவான் சித்தராமு மது அருந்திய பின் தனது கைத்துப்பாக்கியால் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு உள்ளாகி இருப்பார் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

டெல்லியில் பணியில் ஈடுபட்டு வந்த நேரத்தில் பாதுகாப்புக்காக சித்தராமு ரிவால்வர் வாங்கியிருந்தார் என்றும் அதனை சித்தூர் ஜில்லாவுக்கு மாற்ற வேண்டும் என்று ஏற்கெனவே விண்ணப்பம் அளித்து உள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். அந்த ரிவால்ரால்தான் சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories