ஏடிஎம் கார்டுகளை க்ளோனிங் செய்து… மாட்டினாங்க! எப்படி தெரியுமா?

Published:

hyderabad cloing atm cards - 2026

ஹைதராபாதில் ஏடிஎம் கார்டுகள் க்ளோனிங் செய்யும் கூட்டத்தை போலீஸார், கைது செய்தனர்.

ஏடிஎம் கார்டுகளை கிளோனிங் செய்யும் கூட்டத்தை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். ஒடிசாவை சேர்ந்த 3 பேர் சேர்ந்த குழு போலி கார்டுகளை தயார் செய்து ரூ13 லட்சங்களை திருடியுள்ளதாக கண்டுபிடித்தனர்.

ஹைதராபாதில் உள்ள பல ரெஸ்டாரண்ட், பப்புகளில் வேலைசெய்து வரும் மூவர் ஏடிஎம் கார்டுகளை கிளோனிங் செய்து பணத்தை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் போலீசார் கூறினர்.

‘கச்பௌலி’ ஹெச்டிஎஃப்சி பேங்க் மேனேஜர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். பத்து லட்சம் ரூபாய் பணம், ஆறு மொபைல்போன்கள், இரண்டு லேப்டாப்புகள், க்ளௌனிங் இயந்திரங்களை கைப்பற்றினர்.

சைபர் கிரைம் டிசிபி ரோகிணி பிரியதர்ஷினி இதுகுறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். இதுவரை 140 ஏடிஎம் கார்டுகளை குற்றவாளிகள் குளோனிங் செய்து உள்ளதாக குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் முக்கிய குற்றவாளி பிரபுல் குமார் ஆன்லைனில் ஸ்கிமர், க்ளௌனிங் மெஷின்களை வாங்கி வாங்கியுள்ளதாக கூறினார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் பப்புகளில் இந்த குற்றவாளிகள் வெயிட்டர்களாக சேர்ந்துள்ளார்கள். அங்கு வரும் கஸ்டமர்கள் பில் செலுத்தும் சமயத்தில் தம்முடன் எடுத்துச் சென்ற ஸ்கிமர் மிஷின் உதவியோடு கார்டுகளின் டேட்டாவை திருடி அதன் மூலம் பணம் கொள்ளை அடித்துள்ளதாக விளக்கினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img