April 28, 2025, 1:59 PM
32.9 C
Chennai

அதிர்ச்சி! வாரங்கல்… கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 9 புலம்பெயர் தொழிலாளர்கள்!

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் கிணற்றில் புலம் பெயர் தொழிலாளி குடும்பத்தினர் 9 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் கிணற்றில் புலன்பெயர்ந்த கூலிகளின் உடல்கள் மிதந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கொர்ரெகுண்ட கிராமக் கிணற்றிலிருந்து நான்கு இறந்த உடல்களை வெளியில் எடுத்தார்கள். வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகொண்ட மண்டலம் கொர்ரெகுண்ட கிராமத்தில் சோகம் மூண்டது.

வெள்ளிக்கிழமை இன்று காலை கிணற்றில் இருந்து மீண்டும் ஒரு உடல் வெளியே எடுக்கப்பட்டது. நேற்று கிணற்றில் இருந்து 4 உடல்கள் எடுக்கப் பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழ்வாதாரத்துக்காக வாரங்கல் வந்த புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளிகளின் உடல்கள் கிணற்றில் பிணமாக மிதந்தது வியாழக்கிழமை அன்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்சூத் (50), அவர் மனைவி நிஷா (45), 22 வயது பெண், அவளுடைய மூன்று வயது மகன் ஆகியோரின் இறந்த உடல்கள் கிணற்றில் மிதந்தது உள்ளூர் மக்களின் இதயங்களை கலங்கச் செய்தது.

வாரங்கல் மாவட்ட கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் இறந்த உடல்களை கண்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

ALSO READ:  பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

கோசுகொண்ட இன்ஸ்பெக்டர் ஜூபல்லி சிவராமய்யா இதுகுறித்து கூறியதாவது… வரங்கல் அர்பன் மாவட்டத்தில் உள்ள கரீமாபாத் என்ற இடத்திற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்சூத் குடும்பம் புலம் பெயர்ந்து வந்தது. மக்சூதுக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள், அவள் தன் மகன் ஆகியோர் குடும்பமாக வசித்து வந்தனர்.

மக்சூதின் மகளுக்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவரோடு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனாலும் அவர் விவாகரத்து கொடுத்து விட்டதால் பெற்றோருடன் வசித்து வருகிறாள்.

இவர்கள் அனைவரும் வரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரெகுண்டா பிரகதி இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கும் சாயிதத்தா பாரதான் டிரேடர்சில் பழைய சாக்குகளை தைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு மக்கள் அனைவரும் கலக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

இது குறித்து ஊடகங்களில் இன்று காலை பரபரப்பாக வெளியான தகவல்களில்…

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் உள்ள கோரே குந்தா கிராமத்தில், சந்தோஷ் என்பவர் கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வந்தனர். இந்த கோணிப்பை தொழிற்சாலையில் தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கரிமாபாத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ALSO READ:  ‘தமிழர் பாசாங்கு’; திமுக.,வின் இரட்டை வேடம்: தோலுரித்த அமித் ஷா!

ஊரடங்கு காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை அடுத்து பொருளாதார நெருக்கடி காரணமாக, மசூத் மற்றும் அவரது குடும்பத்தினரும் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான குடோனில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மசூத் மற்றும் குடும்பத்தினரை காணவில்லை என்று குடோன் உரிமையாளர் சந்தோஷ் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அச்சமயம் தொழிற்சாலை அருகே உள்ள கிணறு ஒன்றில், நேற்று சிலரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

இதனையடுத்து, கிணற்றில் இருந்து 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலம் மீட்கப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் உடல்களை போலிசார் கைப்பற்றினர். இந்நிலையில், இன்று மேலும் 5 சடலங்கள் அதே கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. மசுத் மகன் சபாக், பீகாரைச் சேர்ந்த தொழிலாளிகள் ஸ்ரீராம் மற்றும் ஷாம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது ஆகியோரின் உடல்களை அதே கிணற்றிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.

ALSO READ:  மக்களவையில் வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஒரே கிணற்றில் இருந்து இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 9 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இறந்துபோன 9 பேரும் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்களா?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories