ஜூன் 24ஆம் தேதி மூச்சு விட முடியாமல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசாங்க புது மருத்துவமனைக்கு சென்ற 62 வயதான தன் கணவர் வசந்த ராவை காணவில்லை என்று அவர் மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் வருந்துகிறார்கள்.
அப்போதிலிருந்து மருத்துவமனை சிப்பந்திகளிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள் என்றும் போலீசாருக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த செய்தியும் வரவில்லை.
தன் கணவர் எங்கிருக்கிறார். என்ன ஆனார் என்று எனக்கு புரியவில்லை என்று அவர் வருந்துகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மேலும் வசுந்தராவின் சகோதரர் கூட சில நாட்கள் முன்பு தான் மரணமடைந்தார்.
அவருடைய பத்தாம் நாள் காரியம் ஆரம்பமாவதற்கு முன்பே வசந்தராவு ஆயாசம் ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
வசுந்தராவை பரிசோதித்த பிரைவேட் மருத்துவமனை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதனால் வசந்தராவும் தனலட்சுமியும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு இருவர் வசுந்தராவை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
தனலட்சுமி வெளியிலேயே இருந்தார். ஆனால் உள்ளே தன் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் நினைத்து மாலை வரை காத்திருந்தார். அவருக்கு யாரும் எந்த விவரமும் கூறவில்லை. அங்கிருந்தவர்களை கேட்டால் சிகிச்சை அளிப்பதாக கூறினார்கள்.
இங்கு அமர வேண்டாம் நாளைக்கு வாருங்கள் என்று கூறியதால் அவர் திரும்ப வீட்டுக்கு சென்றார். மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றால் வசந்தராவு என்ற மனிதர் யாரும் இங்கே இல்லை என்று செய்தி தெரிவித்தார்கள். அவர் பயந்து கவலையடைந்து கணவருக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு மருத்துவமனையில் இருப்பவர்களும் எதுவும் கூறவில்லை.
போலீசாரும் எதுவும் கூறவில்லை. தன் கணவரை தேடி கண்டு பிடியுங்கள் என்று அவர் இப்போது பகிரங்கமாக சோசியல் மீடியாவில் தெரிவித்து வருத்தம் அடைந்து வருகிறார். மருத்துவமனை சிப்பந்தியின் அலட்சியம் காரணமாகவே தன் கணவரின் அடையாளம் காணவில்லை என்று அவர் கலங்குகிறார்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளன்று நிறைய நேரம் அங்கு மருத்துவமனை சிப்பந்தி சரியாக பதிலளிக்கவில்லை. இறுதியில் கெஞ்சிக் கேட்ட பின் தான் தன் கணவரை வீல் சேரில் உட்கார வைத்து அழைத்து சென்றார்கள். அதன்பின் தன் கணவரை காணவில்லை என்று வருந்துகிறார்.
உறவினர் சங்கரநாராயணன் இது தொடர்பாக பேசுகையில் மருத்துவமனையில் தமக்கு செய்தி எதுவும் கூறுவதில்லை என்றும் மாவட்ட கலெக்டர் இது விஷயமாக தலையிட்டு தமக்குரிய நியாயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஒருபுறம் அரசு புது சட்டம் போட்டுள்ளது. முதியவர்கள் தமக்குத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ள கூடாது. மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் பரிசோதித்து அறிவுரை கூறிய பின் வீட்டில் அதற்குரிய வசதியும் பார்த்துக்கொள்ள மனிதரும் இருந்தால் தான் அங்கு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் அல்லது மருத்துவமனையில்தான் சேர வேண்டும் என்று புது சட்டம் இயற்றிய வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.