December 6, 2025, 7:30 AM
23.8 C
Chennai

விஜயவாடா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்! இப்படியும் முதியோரை ‘ட்ரீட்’ செய்வார்களா?!

vijayawada hospital
vijayawada hospital

ஜூன் 24ஆம் தேதி மூச்சு விட முடியாமல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசாங்க புது மருத்துவமனைக்கு சென்ற 62 வயதான தன் கணவர் வசந்த ராவை காணவில்லை என்று அவர் மனைவி தனலட்சுமி மற்றும் உறவினர்கள் வருந்துகிறார்கள்.

அப்போதிலிருந்து மருத்துவமனை சிப்பந்திகளிடம் கேட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள் என்றும் போலீசாருக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை எந்த செய்தியும் வரவில்லை.

தன் கணவர் எங்கிருக்கிறார். என்ன ஆனார் என்று எனக்கு புரியவில்லை என்று அவர் வருந்துகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மேலும் வசுந்தராவின் சகோதரர் கூட சில நாட்கள் முன்பு தான் மரணமடைந்தார்.

அவருடைய பத்தாம் நாள் காரியம் ஆரம்பமாவதற்கு முன்பே வசந்தராவு ஆயாசம் ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

வசுந்தராவை பரிசோதித்த பிரைவேட் மருத்துவமனை மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதனால் வசந்தராவும் தனலட்சுமியும் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். அங்கு இருவர் வசுந்தராவை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

vijayawada hospital
vijayawada hospital

தனலட்சுமி வெளியிலேயே இருந்தார். ஆனால் உள்ளே தன் கணவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் நினைத்து மாலை வரை காத்திருந்தார். அவருக்கு யாரும் எந்த விவரமும் கூறவில்லை. அங்கிருந்தவர்களை கேட்டால் சிகிச்சை அளிப்பதாக கூறினார்கள்.

இங்கு அமர வேண்டாம் நாளைக்கு வாருங்கள் என்று கூறியதால் அவர் திரும்ப வீட்டுக்கு சென்றார். மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றால் வசந்தராவு என்ற மனிதர் யாரும் இங்கே இல்லை என்று செய்தி தெரிவித்தார்கள். அவர் பயந்து கவலையடைந்து கணவருக்காக எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு மருத்துவமனையில் இருப்பவர்களும் எதுவும் கூறவில்லை.

போலீசாரும் எதுவும் கூறவில்லை. தன் கணவரை தேடி கண்டு பிடியுங்கள் என்று அவர் இப்போது பகிரங்கமாக சோசியல் மீடியாவில் தெரிவித்து வருத்தம் அடைந்து வருகிறார். மருத்துவமனை சிப்பந்தியின் அலட்சியம் காரணமாகவே தன் கணவரின் அடையாளம் காணவில்லை என்று அவர் கலங்குகிறார்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளன்று நிறைய நேரம் அங்கு மருத்துவமனை சிப்பந்தி சரியாக பதிலளிக்கவில்லை. இறுதியில் கெஞ்சிக் கேட்ட பின் தான் தன் கணவரை வீல் சேரில் உட்கார வைத்து அழைத்து சென்றார்கள். அதன்பின் தன் கணவரை காணவில்லை என்று வருந்துகிறார்.

உறவினர் சங்கரநாராயணன் இது தொடர்பாக பேசுகையில் மருத்துவமனையில் தமக்கு செய்தி எதுவும் கூறுவதில்லை என்றும் மாவட்ட கலெக்டர் இது விஷயமாக தலையிட்டு தமக்குரிய நியாயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஒருபுறம் அரசு புது சட்டம் போட்டுள்ளது. முதியவர்கள் தமக்குத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ள கூடாது. மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் பரிசோதித்து அறிவுரை கூறிய பின் வீட்டில் அதற்குரிய வசதியும் பார்த்துக்கொள்ள மனிதரும் இருந்தால் தான் அங்கு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் அல்லது மருத்துவமனையில்தான் சேர வேண்டும் என்று புது சட்டம் இயற்றிய வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories