கட்டிலில் இருந்து கீழே விழுந்து… ஆக்சிஜன் இன்றி துடிதுடித்து இறந்த நோயாளி!

Published:

patient-falls-from-bed-leads-to-death
patient-falls-from-bed-leads-to-death
  • மருத்துவமனை கட்டிலிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி.
  • ஆக்சிஜன் இன்றி தெலங்காணா கரீம்நகரில் துடிதுடித்து இறந்த காட்சி.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்த விஷயத்தை மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ள பிறர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரீம்நகர் அரசாங்க மருத்துவமனையில் கொரோனா வார்டில் கோர சம்பவம் நிகழ்ந்தது. மிகமிக கண்டிக்கத்தக்க அலட்சியமான சூழல் நிலவுகிறது. அலட்சியமான, அவலமான சூழலின் இடையில் ஒரு கொரோனா நோயாளி மரணம் அடைந்தார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் நினைவின்றி கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்கு அளிக்கப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை நின்று போய் விட்டதாக தெரிகிறது.

ஆனால் கீழே விழுந்து ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் 45 நிமிஷங்கள் துடித்தாலும் ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று அதே வார்டிலுள்ள ஒரு நோயாளி போன் மூலம் பிறருக்கு செய்தி தெரிவித்தார். அதோடு கூட அது தொடர்பான போட்டோக்களை எடுத்து வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நோயாளி கட்டில் மீது இருந்து கீழே விழுந்த செய்தியை மருத்துவ ஊழியருக்கு சொன்னாலும் யாருமே அதை பொருட்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நோயாளி கீழே விழுந்த சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போன பின்பு ஊழியர் வந்து இறந்த உடலை கட்டில் மேலே ஏற்றி படுக்கவைத்து அப்போது ஆக்சிஜனும் வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். மருத்துவமனையின் சூழ்நிலை இவ்வளவு அவலமானதாக இருக்கிறது என்று சக நோயாளிகள் வருத்தமும் கவலையும் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img