குரான் பெயரில் தங்கம் கடத்தல்! வேறு முறைகேடுகள் குறித்து சுங்கத்துறை விசாரணை!

swapna-suresh-and-pinarayi-vijayan
swapna-suresh-and-pinarayi-vijayan

கேரளாவில் வெளிநாட்டு தூதரகத்தின் மூலமாக குரான் விநியோகம் என்ற பெயரில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது என்று கூறப்படும் நிலையில், வேறு பொருட்கள் எதுவும் அவ்வாறு கடத்தப் பட்டதா என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் அமைந்துள்ளது. இதன் பெயரை பயன்படுத்தி யு.ஏ.இ.,யில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை -என்.ஐஏ., அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் யு.ஏ.இ.,யில் இருந்து முஸ்லிம்களின் மத நூலான குர்ஆன் அதிக அளவில் வந்ததும், அது கேரளத்தில் பல இடங்களில் விநியோகிக்கப் படுவதாகச் சொல்லி பல்வேறு இடங்களுக்கு அனுப்பப் பட்டதும், அதன் பேரில் தங்கக் கடத்தல் நடந்துள்ளது குறித்தும், இந்தப் போர்வையில் வேறு பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து சுங்கத் துறை மூத்த அதிகாரிகள் கூறியபோது… மார்ச் 4ஆம் தேதி, யு.ஏ.இ.,யில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் மூலமாக 4,479 கிலோ எடையுள்ள பார்சல், தூதரகத்துக்கு வந்துள்ளது.

அதில் கேரளாவில் இலவசமாக வினியோகிக்க 6,000 குரான் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டதாக, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலால் கூறியுள்ளார். மேலும், அந்த பார்சலை எடுத்துச் செல்வதற்கு கேரள அரசின் வாகனம் பயன்படுத்தப்பட்டது. இதற்கு, மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி தடையில்லா சான்றிதழ் அளித்துள்ளார்.

ஆனால் மதம் தொடர்பான பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 6,000 குரான் புத்தகங்கள் அதில் இருந்திருந்தால் அதன் எடை இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குரான் பெயரில் வேறு ஏதாவது பொருட்கள் கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, இப்போது இந்த விசாரணைக் குழுவினர் யுஏஇ சென்று அடைந்திருப்பதாகவும், அங்கும் விசாரணை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories