December 5, 2025, 4:03 PM
27.9 C
Chennai

புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

pakistan-parliament
pakistan-parliament

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்றும், அது பிரதமர் இம்ரான் கானின் சாதனை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

kashmir blast
kashmir blast

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவை சகா ஃபவாத் சவுத்ரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல், இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி என்று வர்ணித்துள்ளார். இது 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானிடம் இருந்து வரும் இரண்டாவது ஒப்புதல் வாக்குமூலம்.

ALSO READ | புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ந்வாஸ்)கின் தலைவரும் ஆன அயாஸ் சாதிக், இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உடனே விடுவித்ததாக அம்பலப்படுத்தினார்.

ALSO READ | “அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்!”

நாடாளுமன்றத்தில் பேசிய அவர் “ இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட போது, பாகிஸ்தானில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்கவில்லை. அப்போது அறைக்குள் ராணுவ தளபதி நுழைந்த போது அவரது கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்துக் கொட்டியது.

தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லை என்றால், இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில் உள்ளது என்று அந்தப் பின்னணியை பகிரங்கமாகக் கூறினார்.

ALSO READ |புல்வாமா தாக்குதலுக்கு பின்… பாகிஸ்தான் இரட்டை முகத்துடன் உள்ளது!

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பாகிஸ்தான் அமைச்சர், ஃபவாத் சவுத்ரி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், “இம்ரான் அரசுதான் புல்வாமா தாக்குதலை நடத்தியது. நாங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கொலை செய்துள்ளோம். புல்வாமாவில் நடந்தது இம்ரான் அரசின் மிகப்பெரிய வெற்றி” என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அந்த நேரம் ஒரு கொந்தளிப்பான கூக்குரல்கள் எதிர்க்கட்சிகளால் எழும்பிக் கொண்டிருந்ததால், சபாநாயகர் சவுத்ரியை மௌனமாக இருக்கவைக்க முயன்றார்.

ALSO READ | பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்! புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும்!

பாகிஸ்தான் அவையில் மோடி மோடி என கோஷமும் எழுப்பப் பட்டது.

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய பொய்ப் பிரசாரத்தை இப்போது பலரும் கண்டிக்கிறார்கள். புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் தாங்கள்தான் ஈடுபட்டதாக பாகிஸ்தான் இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அன்று காங்கிரசார் இது தேர்தலுக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்று பாஜகவை குற்றம் சொல்லி செய்திகளை பரப்பினார்கள். ஒருபடி மேலே சென்று அது ஒரு விபத்து என்று கூறினார் காங்கிரசின் திக்விஜய்சிங். இப்போது அவர்களையெல்லாம் டிவிட்டர் பதிவுகளில் கலாய்த்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்

தொடர்புடைய செய்திகள்

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி! பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் அதிரடி!

புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories