புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

pakistan-parliament
pakistan-parliament

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்றும், அது பிரதமர் இம்ரான் கானின் சாதனை என்றும் பாகிஸ்தான் அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

kashmir blast
kashmir blast

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவை சகா ஃபவாத் சவுத்ரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல், இம்ரான் கானின் மிகப்பெரிய வெற்றி என்று வர்ணித்துள்ளார். இது 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானிடம் இருந்து வரும் இரண்டாவது ஒப்புதல் வாக்குமூலம்.

ALSO READ | புல்வாமா போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும்: நாங்கள் தாக்குவோம்: மிரட்டுகிறார் இம்ரான் கான்!

முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ந்வாஸ்)கின் தலைவரும் ஆன அயாஸ் சாதிக், இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உடனே விடுவித்ததாக அம்பலப்படுத்தினார்.

ALSO READ | “அபிநந்தனை உடனே விட்டு விடுவோம்… இல்லை எனில் 9 மணிக்கு இந்தியா தாக்கும்!”

நாடாளுமன்றத்தில் பேசிய அவர் “ இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்ட போது, பாகிஸ்தானில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் இம்ரான் கான் பங்கேற்கவில்லை. அப்போது அறைக்குள் ராணுவ தளபதி நுழைந்த போது அவரது கால்கள் நடுங்கின. அவருக்கு வியர்த்துக் கொட்டியது.

தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லை என்றால், இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில் உள்ளது என்று அந்தப் பின்னணியை பகிரங்கமாகக் கூறினார்.

ALSO READ |புல்வாமா தாக்குதலுக்கு பின்… பாகிஸ்தான் இரட்டை முகத்துடன் உள்ளது!

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய பாகிஸ்தான் அமைச்சர், ஃபவாத் சவுத்ரி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில், “இம்ரான் அரசுதான் புல்வாமா தாக்குதலை நடத்தியது. நாங்கள் இந்தியாவுக்குள் நுழைந்து கொலை செய்துள்ளோம். புல்வாமாவில் நடந்தது இம்ரான் அரசின் மிகப்பெரிய வெற்றி” என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் அந்த நேரம் ஒரு கொந்தளிப்பான கூக்குரல்கள் எதிர்க்கட்சிகளால் எழும்பிக் கொண்டிருந்ததால், சபாநாயகர் சவுத்ரியை மௌனமாக இருக்கவைக்க முயன்றார்.

ALSO READ | பாகிஸ்தானுக்கு இந்தியா சம்மன்! புல்வாமா தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும்!

பாகிஸ்தான் அவையில் மோடி மோடி என கோஷமும் எழுப்பப் பட்டது.

புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் நடத்திய பொய்ப் பிரசாரத்தை இப்போது பலரும் கண்டிக்கிறார்கள். புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் தாங்கள்தான் ஈடுபட்டதாக பாகிஸ்தான் இப்போது ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அன்று காங்கிரசார் இது தேர்தலுக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்டது என்று பாஜகவை குற்றம் சொல்லி செய்திகளை பரப்பினார்கள். ஒருபடி மேலே சென்று அது ஒரு விபத்து என்று கூறினார் காங்கிரசின் திக்விஜய்சிங். இப்போது அவர்களையெல்லாம் டிவிட்டர் பதிவுகளில் கலாய்த்து வருகிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்

தொடர்புடைய செய்திகள்

புல்வாமா தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி! பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் அதிரடி!

புல்வாமா தாக்குதல் குறித்து விசாரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

காறித் துப்புகிறார்கள் காங்கிரஸின் திக்விஜய் சிங்கை..! புல்வாமா ஓர் விபத்து என்று சொன்னால்..?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Topics

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

சுவாமி விவேகானந்தர், மகரிஷி அரவிந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய வங்கத்தில் பிறந்த தேசபக்த சிங்கங்களுக்குத் தோள் கொடுத்த தமிழகம், இன்றைய வங்காளத்தின் அரசியல் வழியில்

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

Entertainment News

Popular Categories