கர்ப்பத்தில் இருந்த குழந்தையைக் காணோம்… பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

Published:

woman-1
woman-1

கர்ப்பத்தில் இருந்த சிசுவை மாயம் செய்து விட்டார்கள் என்று ஒரு பெண்மணி குற்றம்சாட்டியதால் அரசாங்க பிரசவ மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் மக்கள் தெரிவித்த விவரங்களின்படி… நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையை சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி அண்மையில் திருப்பதி அரசாங்க பிரசவ மருத்துவமனைக்கு வந்தார்.

பலமுறை வந்து சிகிச்சை பெற்று திரும்பிச் சென்றார். அதேபோல் ஞாயிறன்று மருத்துவமனைக்கு வந்தவர் விந்தையான விவாதத்தால் மருத்துவமனை ஊழியர் மீது குற்றம் சாட்டினார். பிரசவத்திற்காக வந்த தனக்கு கர்ப்பம் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள் என்று மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கர்ப்பத்திலுள்ள சிசுவை மாயம் செய்துவிட்டார்கள் என்று மருத்துவர்கள் மீது ஆத்திரம் அடைந்தார். மருத்துவமனையின் நடவடிக்கையை குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண்மணியின் நடவடிக்கையைப் பார்த்து வியப்படைந்த மருத்துவர்கள் அலிபிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்கள். வயிற்றில் காற்றுக் குமிழிகள் சேர்ந்திருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

மருத்துவர்களின் புகாரின் படி மருத்துவமனைக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண்மணியின் மனநிலையை குறித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img