
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், சிங்கரேணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்மீரா நாஜி (75). வயது மூப்பு காரணமாகப் பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேற்றியதால், மூதாட்டி அஸ்மீரா, கடந்த சில மாதங்களாக வீடில்லாமல் பொதுவெளிகளில் தங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கரேணி கிராமத்திலிருந்து கரேபள்ளி கிராமத்துக்கு மூதாட்டி கடந்த வாரம் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்திருக்கிறார். யாசகம் பெற்றும், வீடு வீடாக உணவு கேட்டுச் சாப்பிட்டும் தங்கியிருந்த மூதாட்டி அஸ்மீராவை, அதே பகுதியைச் சேர்ந்த உபேந்தர் (53) என்ற நபர் கவனித்து வந்திருக்கிறார். அடிக்கடி மூதாட்டிக்கு உணவளிப்பதுபோல் உபேந்தர் உதவியிருக்கிறார்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூதாட்டி அஸ்மீராவுக்கு உணவளிப்பதாகக் கூறி, உபேந்தர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வீட்டுக்குள் வந்ததும் உபேந்தர் மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சற்றும் எதிர்பாராத மூதாட்டி அஸ்மீரா கத்திக் கூச்சலிட்டு உதவிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார்.