ஆவி அதிகம் பிடிக்கிறீங்களா? கருப்பு பூஞ்சை அபாயம்! மருத்துவர் எச்சரிக்கை!

Deepak
Deepak

அதிகப்படியாக நீராவி சிகிச்சை எடுத்துக் கொள்வது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பெங்களூரை சேர்ந்த பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணரை தீபக் ஹல்திப்பூர்.

கொரோனா இரண்டாவது அலையால் நாடு மிகப்பெரிய பாதிப்பில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கொரோனா நோயாளிகள் மத்தியில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என கலர்கலராக நோய்கள் பரவி வருவது தெரியவந்தது.

அதிலும் கருப்பு பூஞ்சை நோய் நாடு முழுக்க ஆயிரக்கணக்கான மக்களிடம் பரவியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

முகத்தில் வீக்கம், கண் பகுதியில் வீக்கம் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும். கண்கள் சிவப்பாக மாறுவது போன்றவை தீவிர அறிகுறிகள். இப்படி ஏதாவது தென்பட்டால், உடனடியாக, காது மூக்கு தொண்டை நிபுணரை பார்த்து இந்த நோயை சரி செய்யாவிட்டால் கிருமி மூளைக்கு சென்று சேர்ந்து நோயாளி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதாலும், ஸ்டீராய்டு ஊசிகள் போடப்படுவதாலும்தான் இதுபோல பாதிப்பு ஏற்படுவதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது. ஆனால் இதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் தீபக்.

இதுபற்றி அவர் ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கூறுகையில், கடந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக காணப்படவில்லை. ஆனால், அதை ஒப்பிடும்போது இப்போது இந்த நோய் பரவல் ஏற்பட்டு இருக்கும் விகிதம் அதிகரித்து இருக்கிறது.

இதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவு. இரண்டாவது விஷயம், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது. பெரும்பாலும் கருப்பு பூஞ்சை நோய், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நோயாளியிடம்தான் அதிகமாக பரவியதை பார்க்க முடிகிறது.

இன்னொரு விஷயம், ஒரு நாளைக்கு 10 முறை தண்ணீரை சூடுபடுத்தி அதில் ஆவி பிடித்து கொரோனாவை விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகப்படியாக நீராவிப் பிடிப்பதால் மூக்கின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது.

கருப்பு பூஞ்சை (mucormycosis) நோய்க்கிருமி காற்றில் பரவி இருக்கிறது. இதை நமது மூக்கு தடுத்துக் கொள்ளும். ஆனால், நீராவி பிடிப்பதன் மூலமாக அந்த தடுப்பு திறன் குறைகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தான் கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக ஒரு கருத்து இருந்தது. அது தவறான தகவல். வீட்டிலிருந்து கொரோனா மருந்து மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கும் இந்த நோய் தொற்று பரவியுள்ளது.

எனவே, ஸ்டீராய்டு ஊசிகள், ஆக்ஸிஜன் ஏற்றுவது ஆகியவைதான் இந்த நோய்களுக்கு காரணம் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். அறிகுறிகள் தென்பட்டதும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கருப்பு பூஞ்சை தொடர்பாக அதிகப்படியான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தீபக் ஹல்திப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories