சவுதி சிறையில் இருந்து 850 இந்தியர்கள் விடுதலை! மோடியின் சாதனை!

saudi prince mode - 2026

 

சவுதியில் சிறையில் இருக்கும் 850 இந்தியர்கள் விடுதலை செய்யப் படுவதாக, பிப்.20ம் தேதி சவுதி அரசு ஆணை பிறப்பித்தது! இது மோடியின் கட்டிப்புடி வைத்தியத்துக்குக் கிடைத்த பரிசு என்கிறார்கள் மோடி ஆதரவாளர்கள்.

அண்மையில் சௌதி இளவரசர் இந்தியா வந்திருந்தார். அப்போது, பாரதப் பிரதமர் விமான நிலையம் வரை சென்று காத்திருந்து சவுதி இளவரசரை வரவேற்றது குறித்து இரண்டு நாட்களாக அலசி ஆராய்ந்து குற்றம் கண்டு பிடிக்க முயற்சி செய்யும் எதிர்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான் செய்தியாக, இந்தச் செய்தி அமைந்திருக்கிறது என்று கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் இந்தியா வந்த போது, மரபுகளைக் கடந்து, பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று, காத்திருந்து, சவுதி இளவரசரைக் கட்டிப் பிடித்து வரவேற்றார். ஆனால், இதனை பெரிதாக விமர்சித்தனர் எதிர்க்கட்சியினர். குறிப்பாக, காங்கிரஸார்.

modi saudi prince - 2026

இந்நிலையில் மோடியின் கட்டிப்புடி வைத்தியத்தால் விளைந்த நன்மை என்று பாஜக.,வினர் இந்த 850 பேர் விடுதலையைக் குறித்து பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் தங்கள் சமூகத் தளப் பக்கங்களில் செய்துள்ள பதிவுகளில்… இதோ ஒரு தலைவன்… அவன் கால்கடுக்க காத்து நின்றது நமக்காக சிறையில் வாடிக்கொண்டிருந்த இந்தியர்களுக்காக!

போகிற போக்கில் கிடைத்ததை சுருட்டி குடும்பத்தை வளமாக்க பதவிக்கு வர ஆசைப்படும் சுயநலவாதிகள் மத்தியில், நமக்காக எல்லா விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு, பழிச்சொல்லையும் பெரிது படுத்தாது கடமையை மட்டும் முன்னிறுத்தி செயல் படும் நரேந்திர மோடி… இவரல்லா கர்மவீரர். தனிப்பெரும் தலைவன்.!

850 இந்தியர்கள் விடுதலை குறித்து இப்போது விவாதம் நடத்துங்கள். விமர்சனம் செய்யுங்கள். அரசியல் நேர்மை இருந்தால்… – என்று சவால் விடுக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories