பேச முயற்சி செய்தாராம் மோடி… போனை எடுக்கவே இல்லியாம் மம்தா!

mamta banarjee modi - 2026

புது தில்லி: போனி புயல் மேற்கு வங்கத்தை பாதித்துள்ள நிலையில், அரசியலும் வெகுவாக பாதித்திருக்கிறது. பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் பேசவில்லை என்று ஒரு புறம் அரசியல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பானி புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவருடன் பேச முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

போனி புயல் கடந்த மே 3ம் தேதி காலை 8:30க்கு ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்பூர் – சந்த்பாலி இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 175 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. ஒடிசாவில் கரை கடந்த புயல் அதன் பின்னர் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்துக்குள் சென்றது. அங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. .

இந்நிலையில், புயலால் பாதிக்கப் பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பாதிப்புகளைக் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும், ஒடிஸா மாநிலத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

இதை அடுத்து, மேற்கு வங்க மாநில பாதிப்பு குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் கேட்டறிந்தார். பிரதமர் மோடியும், இந்த உரையாடல் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் மம்தாவிடம் பேசாமல், ஆளுநரைத் தொடர்பு கொண்டதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நேரம் என்பதால், இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்த போது, மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி பேசுவதற்காக, நாங்கள் தொலைபேசியில் முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். இரு முறையும் எங்களது அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒரு முறை முதல்வர் சுற்றுப் பயணத்தில் உள்ளார் என தெரிவித்தனர். அதன் பின்னரே ஆளுநருடன் பிரதமர் மோடி பேசினார் என்று கூறினர் அதிகார்கள்!

முன்னதாக, வருடம் ஒருமுறை தனக்கு கோல்கத்தா ரசகுல்லா இனிப்பையும், குர்தாவும் அனுப்பி வைப்பார் மம்தா பானர்ஜி என்று நட்புடன் கூறியதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி, அதனைத் தொடர் அரசியல் ஆக்கினார். மோடிக்கு இனிமேல் சகதியும் கூழாங்கற்களும் கலந்து செய்த ரசகுல்லாவை அனுப்புகிறேன், அதை சாப்பிட்டு அவர் பல் உடையட்டும் என்று கோபத்தில் கூறினார்.

இதை அடுத்து மோடியும், வங்கத்து புனித மண்ணில் செய்த ரசகுல்லா எனக்கு பிரசாதம் என்றார். தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நிலையில் இது அரசியல் ஆக்கப் பட்டது. இந்நிலையில், வங்கத்தின் மீண்டும் ஓர் அரசியலை நடத்த மம்தா முயற்சி செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories