December 6, 2025, 9:32 PM
25.6 C
Chennai

பேச முயற்சி செய்தாராம் மோடி… போனை எடுக்கவே இல்லியாம் மம்தா!

mamta banarjee modi - 2025

புது தில்லி: போனி புயல் மேற்கு வங்கத்தை பாதித்துள்ள நிலையில், அரசியலும் வெகுவாக பாதித்திருக்கிறது. பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் பேசவில்லை என்று ஒரு புறம் அரசியல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், பானி புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் அவருடன் பேச முடியவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

போனி புயல் கடந்த மே 3ம் தேதி காலை 8:30க்கு ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்பூர் – சந்த்பாலி இடையே கரையைக் கடந்தது. மணிக்கு 175 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. ஒடிசாவில் கரை கடந்த புயல் அதன் பின்னர் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்துக்குள் சென்றது. அங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. .

இந்நிலையில், புயலால் பாதிக்கப் பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட் நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக பாதிப்புகளைக் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும், ஒடிஸா மாநிலத்துக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.

இதை அடுத்து, மேற்கு வங்க மாநில பாதிப்பு குறித்து அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியிடம் கேட்டறிந்தார். பிரதமர் மோடியும், இந்த உரையாடல் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் மம்தாவிடம் பேசாமல், ஆளுநரைத் தொடர்பு கொண்டதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் நேரம் என்பதால், இந்த விவகாரம் பெரிதாகியுள்ளது.

இது குறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்த போது, மம்தா பானர்ஜியுடன் பிரதமர் மோடி பேசுவதற்காக, நாங்கள் தொலைபேசியில் முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். இரு முறையும் எங்களது அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒரு முறை முதல்வர் சுற்றுப் பயணத்தில் உள்ளார் என தெரிவித்தனர். அதன் பின்னரே ஆளுநருடன் பிரதமர் மோடி பேசினார் என்று கூறினர் அதிகார்கள்!

முன்னதாக, வருடம் ஒருமுறை தனக்கு கோல்கத்தா ரசகுல்லா இனிப்பையும், குர்தாவும் அனுப்பி வைப்பார் மம்தா பானர்ஜி என்று நட்புடன் கூறியதை அதிர்ச்சியுடன் எதிர்கொண்ட மம்தா பானர்ஜி, அதனைத் தொடர் அரசியல் ஆக்கினார். மோடிக்கு இனிமேல் சகதியும் கூழாங்கற்களும் கலந்து செய்த ரசகுல்லாவை அனுப்புகிறேன், அதை சாப்பிட்டு அவர் பல் உடையட்டும் என்று கோபத்தில் கூறினார்.

இதை அடுத்து மோடியும், வங்கத்து புனித மண்ணில் செய்த ரசகுல்லா எனக்கு பிரசாதம் என்றார். தொடர்ந்து தேர்தல் நடைபெறும் நிலையில் இது அரசியல் ஆக்கப் பட்டது. இந்நிலையில், வங்கத்தின் மீண்டும் ஓர் அரசியலை நடத்த மம்தா முயற்சி செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories