ஜெகன் குழுவில் நடிகை ஜெயசுதா குறிவைத்திருக்கும் அந்தப் பதவி!

Published:

jayasutha ysrjagan - 2026

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் குழுவில் ஜெயசுதா – முக்கிய பதவியின் மேல் கண் வைத்திருக்கிறார்.

முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டதுடன், ஒய்எஸ் ராஜசேகர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஜெயசுதா. நாமினேட் பதவியின் மேல் ஜெயசுதாவுக்கு ஆசை பிறந்துள்ளது. ஏ பி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர் பெர்சனாக விரும்புகிறார் ஜெயசுதா !

2019 தேர்தலில் ஜெகன் நிச்சயம் வென்று முதல்வராவார் என்று எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்தார் திரைப்பட நடிகை ஜெயசுதா. எதிர்பார்த்தது போலவே ஜெகன் முதலமைச்சர் ஆனார்.

தற்போது ஜெகனின் டீமில் முக்கிய பதவியை கைப்பற்ற போகிறார் ஜெயசுதா. “கட்சியை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். தனிப்பட்ட வகையில் எங்கிருந்தும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜெகனின் உத்தரவுபடி சேவை புரிவேன்” என்று கூறி இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருந்த ஜெயசுதா, ஜெகன் வெற்றி பெற்றவுடன் நாமினேடட் பதவியை கோருகிறார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தெலுங்குதேசம் பார்ட்டியின் நாமினேடட் போஸ்ட்கள் வரிசையாக காலி ஆவதால் அந்த இடங்களில் முக்கியமானதான ஏபி ஃப்லிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவியின் மீது ஆசை வைத்து உள்ளார் ஜெயசுதா.

முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டு இருந்ததோடு கூட ஒய்எஸ்ஆர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக பணிபுரிந்தது திரைப்பட உலகின் முக்கியமானவர்களோடு நெருங்கிய தொடர்பு இருப்பது….. போன்றவற்றால் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவிக்கு ஜெயசுதா பொருத்தமானவராக இருப்பார் என்று ஜெகனும் கூறி வருகிறார்.

இந்த பதவிக்கு ஜெயசுதாவுடன் இன்னும் சிலரும் மல்லுக்கட்டுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் ஜெயசுதாவோடு கூட மோகன்பாபு ஜீவிதா ராஜசேகர் பானுசந்தர் போன்றவர்கள் ஒய்சிபி தரப்பில் பிரச்சாரம் செய்தார்கள்.

இவர்களுள் ஜெயசுதா மோகன்பாபு ஜீவிதா, ராஜசேகர் ஆகியோர் நாமினேட் பதவிகளின் மேல் கண் வைத்து உள்ளார்கள். மோகன்பாபு திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக போகிறார் என்று கூட பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு தேசம் ஆட்சியில் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மனாக இருந்த அம்பிகா கிருஷ்ணா சமீபத்தில் ராஜினாமா செய்ததால் இந்த ரேஸில் வந்துள்ளார் ஜெயசுதா. ஆயினும் இந்த பந்தயத்தில் மோகன்பாபுவின் பெயரும் உள்ளது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img