ஹைதரபாத்தில் ஆந்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கட்டடங்கள் தெலங்கானாவிடம் ஒப்படைப்பு!

jagan chandrasekara rao - 2026

ஹைதராபாத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட  அரசுக் கட்டடங்களை ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா அரசிடம் ஒப்படைத்தது.

ஹைதராபாத்தில் இருந்த ஆந்திர பிரதேச கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் ஒப்புக்கொண்டார். ஆளுநரின் முன்னிலையில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகனும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பின் சம்மதத்துடன் கட்டடங்களை தெலங்கானவுக்கு ஒதுக்கி ஆளுநர் நரசிம்மன் உத்தரவு பிறப்பித்தார்.

ஆந்திர பிரதேச அரசுக்கு ஒதுக்கிய கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைத்து இரு மாநில கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்மன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் ஆந்திரப் பிரதேச காவல் துறையின் தேவைகளுக்காக ஒரு கட்டடமும் பிற அலுவலக நிர்வாகத்திற்காக மற்றுமொரு கட்டடமும் ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்குவதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநில பிரிவினையின் போது பத்து ஆண்டுகளுக்கு ஹைதராபாத் நகரத்தை பொது தலைநகராக அறிவித்தார்கள். இந்தப் பத்தாண்டு காலத்திற்கு இரு மாநிலங்களுக்கும் சமமாக ஹைதராபாதில் அரசாங்க கட்டடங்களை ஒதுக்கினார்கள். ஹைதராபாதிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கான அலுவலகங்கள் அனைத்தும் புதிய தலைநகரான அமராவதிக்கு சிறிது சிறிதாக மாற்றப் பட்டு விட்டன.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

ஹைதராபாதில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒதுக்கிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை போன்றவற்றுடன் பிற கட்டடங்களும் இப்போது காலியாகிவிட்டன. ஆந்திரத்துக்கு ஒதுக்கிய கட்டடங்களை அவர்கள் பயன்படுத்தாததால் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.  எனவே அவற்றை தம் மாநிலத்துக்கு அளிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு தொடர்ந்து ஆளுநரிடம் கோரி வந்தது.

அந்தப் பிரச்னை ஞாயிறுடன் தீர்ந்தது. சனிக்கிழமை இரவு நடந்த இஃப்தார் விருந்திற்காக வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்,  தெலுங்கானா முதல்வர் கேசிஆர் இருவரும் ஆளுநர் நரசிம்மன் முன்னிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் அங்கீகரித்தார்

அதேபோல் ஹைதராபாதில் உள்ள கட்டடங்களை தம் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று தெலங்கானா அரசும் ஆளுநரிடம் கூறியது. இதை அடுத்து அவர் இருமாநில ஒப்புதலுடன் கட்டடங்களை தெலங்கானாவுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Topics

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories