ஹைதரபாத்தில் ஆந்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கட்டடங்கள் தெலங்கானாவிடம் ஒப்படைப்பு!

jagan chandrasekara rao - 2026

ஹைதராபாத்தில் இருந்த ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்ட  அரசுக் கட்டடங்களை ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா அரசிடம் ஒப்படைத்தது.

ஹைதராபாத்தில் இருந்த ஆந்திர பிரதேச கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் ஒப்புக்கொண்டார். ஆளுநரின் முன்னிலையில் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகனும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பின் சம்மதத்துடன் கட்டடங்களை தெலங்கானவுக்கு ஒதுக்கி ஆளுநர் நரசிம்மன் உத்தரவு பிறப்பித்தார்.

ஆந்திர பிரதேச அரசுக்கு ஒதுக்கிய கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைத்து இரு மாநில கவர்னர் ஈஎஸ்எல் நரசிம்மன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் ஆந்திரப் பிரதேச காவல் துறையின் தேவைகளுக்காக ஒரு கட்டடமும் பிற அலுவலக நிர்வாகத்திற்காக மற்றுமொரு கட்டடமும் ஆந்திரப் பிரதேசத்துக்கு ஒதுக்குவதாக அந்த உத்தரவில் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர மாநில பிரிவினையின் போது பத்து ஆண்டுகளுக்கு ஹைதராபாத் நகரத்தை பொது தலைநகராக அறிவித்தார்கள். இந்தப் பத்தாண்டு காலத்திற்கு இரு மாநிலங்களுக்கும் சமமாக ஹைதராபாதில் அரசாங்க கட்டடங்களை ஒதுக்கினார்கள். ஹைதராபாதிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கான அலுவலகங்கள் அனைத்தும் புதிய தலைநகரான அமராவதிக்கு சிறிது சிறிதாக மாற்றப் பட்டு விட்டன.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஹைதராபாதில் ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒதுக்கிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை போன்றவற்றுடன் பிற கட்டடங்களும் இப்போது காலியாகிவிட்டன. ஆந்திரத்துக்கு ஒதுக்கிய கட்டடங்களை அவர்கள் பயன்படுத்தாததால் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.  எனவே அவற்றை தம் மாநிலத்துக்கு அளிக்க வேண்டும் என்று தெலங்கானா அரசு தொடர்ந்து ஆளுநரிடம் கோரி வந்தது.

அந்தப் பிரச்னை ஞாயிறுடன் தீர்ந்தது. சனிக்கிழமை இரவு நடந்த இஃப்தார் விருந்திற்காக வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்,  தெலுங்கானா முதல்வர் கேசிஆர் இருவரும் ஆளுநர் நரசிம்மன் முன்னிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, கட்டடங்களை தெலங்கானா அரசிடம் ஒப்படைப்பதற்கு ஜெகன் அங்கீகரித்தார்

அதேபோல் ஹைதராபாதில் உள்ள கட்டடங்களை தம் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று தெலங்கானா அரசும் ஆளுநரிடம் கூறியது. இதை அடுத்து அவர் இருமாநில ஒப்புதலுடன் கட்டடங்களை தெலங்கானாவுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

Topics

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

Entertainment News

Popular Categories