December 6, 2025, 9:10 AM
26.8 C
Chennai

போலீஸ் ஊழலை எதிர்த்தேன்.. என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தனர்! : பிரதாப் சந்திர சாரங்கி எம்.பி.,!

pratab - 2025

என் மீது வேண்டுமென்றே போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்தனர்! சில வழக்குகள் பொய் என்று நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எளிமையான வாழ்க்கையால் மத்திய இணை அமைச்சர் ஆன பிரதாப் சாரங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்

ஒடிசா மாநிலம் பாலாசூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் பிரதாப் சந்திர சாரங்கி! 64 வயதான இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக சேவைகள் பல செய்து வருகிறார்! சைக்கிளில்தான் வலம் வருகிறார்! வேறு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை!

ஒடிசாவின் மோடி என்று இவரை மக்கள் புகழ்கின்றனர்! இவருடைய எளிமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது! சமூக வலைதளங்களில் பலரும் ஹீரோ போன்று கொண்டாடினர்!

இந்நிலையில் கடந்த 99 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்போது ஒடிசா பஜ்ரங்க் தளத்தின் தலைவராக இருந்த சாரங்கியின் தொடர்பு உள்ளது என்று செய்திகள் பரவின.

அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதிலும் சாரங்கியை போலீசார் கைது செய்தனர்! ஆனால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்!

pratab chandra sarangi - 2025இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சாரங்கி கூறிய போது, என் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை! போலீசார் வேண்டும் என்றே என் மீது வழக்குகளை பதிவு செய்து வந்தனர்

காவல்துறையில் ஊழலை எதிர்த்து நான் போராடினேன்! போலீசார் லஞ்சம் வாங்குவதை எதிர்த்தேன்! சமூக நலனுக்காக நான் போராட்டங்கள் பல நடத்தியதை ஊழல் போலீஸ் அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! எனவே தான் என் மீது வழக்குகள் பதிவு செய்தனர்!

ஆனால் அந்த வழக்குகள் பலவும் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க பட்டுவிட்டன! அதே போல் மீதமுள்ள வழக்குகளும் பொய்யென நிரூபிக்கப்படும்.

அதேபோல் ஆஸ்திரேலிய பாதிரியார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அதுவும் தேவையற்ற வகையில் என்மீது அவதூறு கிளப்பி வருகிறார்கள்! குறிப்பாக சமூக வலைதளங்களில்” என்று பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories