தெலுங்கு அன்னைக்கு துரோகம்! அதனால் பெற்ற சாபம்! சந்திரபாபு நாயுடு படுதோல்வி!

Published:

naidu yellow - 2026

சந்திரபாபுவுக்கு ‘தெலுகு தல்லி’ சாபம்…. முன்னாள் எம்பி செய்த விமர்சனம்….

முன்னாள் ராஜ்யசபா மெம்பரும் பிரபல இலக்கியவாதியுமான ‘யார்லகட்ட லக்ஷ்மி பிரசாத்’ சந்திரபாபுவின் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது பற்றி சுவையாக தன் அபிப்பிராயத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தோல்விக்கு காரணங்கள் என்ன என்பதை பற்றி அரசியல் வட்டாரத்தில் பலவித விவாதங்கள் நடந்து வருகின்றன. புதிதாக முன்னாள் rajya sabha மெம்பரும் பிரபல இலக்கியவாதியுமான ‘யார்லகட்ட லட்சுமி பிரசாத்’ சந்திரபாபுவின் தலைமையில் இருக்கும் டிடிபி ஏன் தோல்வி அடைந்தது என்பதற்கான சுவையான காரணத்தை கூறியுள்ளார்

சந்திரபாபு முதல்வராக இருந்தபோது தெலுங்கு மொழியின் முன்னேற்றத்திற்காக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றவில்லை அதனால் தெலுகு தல்லி சாபம் அளித்து விட்டாள். அதனால் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியைத் தழுவியது என்றார் விசாகப்பட்டினத்தில் ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

புதிய முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துள்ள செயல்பாடுகளை புகழ்ந்தார்

எல்லா பள்ளிகளிலும் தெலுகு மொழியை கட்டாயமாக்குவதாக ஜெகன் கூறியுள்ளது நற்செய்தி என்று வரவேற்றார். தெலுங்கு மொழி வளர்ச்சிக்காக ஜெகன் செய்துவரும் முயற்சியை பாராட்டினார்

மேலும் அந்த சந்தர்ப்பத்தில் தெலுகு விஷ்வ வித்யாலயம் தெலுகு அகாடமி இவற்றை இரண்டாகப் பிரிப்பதை துரிதப்படுத்துமாறு இரு மாநில அரசாங்கங்களை கேட்டுக் கொண்டார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img