புகழ்பெற்ற போனாலு ஜாத்திரை தொடக்கம்! முதல்வர் கேசிஆர் பங்கேற்பு!

Published:

bonalu jatra - 2026

செகந்தராபாதின் வரலாற்றுச் சிறப்பு மிக்க “உஜ்ஜயினி மகாகாளி” அம்மனின் “போனாலு ஜாத்திரை” ஞாயிற்றுக் கிழமை நேற்று ஆரம்பமானது. முதல்வர் கேசிஆர் அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூஜைகளில் பங்கேற்றார்.

அதற்கு முன்பு விடியற்காலை நான்கு மணிக்கு ஸ்ரீநிவாஸ் யாதவ் குடும்பத்துடன் வந்து அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தார். ஞாயிறு, திங்கள் கிழமைகளில் நடக்கும்’ போனாலு’ கொண்டாட்டங்களுக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து உள்ளார்கள்.

ஞாயிறு காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்கு பெரிய அளவில் திரண்டு வர தொடங்கினார். அமைச்சர் ஸ்ரீனிவாச கௌட், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பிஜேபி எம் எல் ஸி ராமச்சந்திர ராவு, மேதகக் எம்எல்ஏ பத்மாதேவேந்தர் ரெட்டி ஆகியோர் அம்மனை தரிசித்தனர் .

bonalu jatra4 - 2026போனாலு ஜாத்திரைக்கு போலீஸார் 2,000 பேர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள். அம்மனுக்கு காய்கறி, பலகார வண்டிகள் ஊர்வலம், போத்தராஜு நாட்டியம், அம்பாரி ஊர்வலம், பலி சட்டி போன்ற முக்கிய கொண்டாட்டங்கள் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

சென்ற வருடம் 20 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் மகா காளி அம்மனை வந்து தரிசித்து வழிபட்டு சென்றனர். இந்த ஆண்டு அது 25 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img