December 7, 2025, 12:06 AM
25.6 C
Chennai

இன்று சர்வதேச புலிகள் தினம்..! சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்த புலிகள்!

tigersday juy29 - 2025

இன்று சர்வதேச புலிகள் தினம். இதையொட்டி புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தகவல்கள் பரிமாறப்படுகின்றன

புலிகள் சுதந்திரமாக பாதுகாக்கப்பட்டால் காடுகளையும் காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும் உயிரினங்களையும் உணவு சங்கிலியையும் நாம் காப்பாற்றியதாக பொருள் என்று வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்!

புலிகள் மொத்தம் 13 நாடுகளில் தான் உள்ளன. 15 முதல் 25 ஆண்டுகள் வரை வாழும் புலிகள் தனிமை விரும்பிகள். மான்களை அதிகம் வேட்டையாடி உண்ணும் புலிகள் 2 முதல் 6 குட்டிகள் வரை போடும்!

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலிகள், உடலில் உள்ள கோடுகளை வைத்து அதன் தனித்துவத்தை பறைசாற்றுகின்றன. இந்தியாவில் புலிகளை பாதுகாக்க தேசிய புலிகள் காப்பகம் ஆணையம் அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது!

புலிகளின் வாழ்விட பரப்பளவை அதிகப்படுத்துவது, வேட்டையாடப் படுவதை தடுப்பது, விபத்தில் சிக்கி தவிர்ப்பது உணவுத் தேவைக்கு மான் போன்ற உயிரினங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இதன் விளைவாக 2006 இல் 1411 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகள் 2014இல் 1896ஆக அதிகரித்தது! புலிகளை பாதுகாக்க அதனால் விளையும் நன்மை உணவுச் சங்கிலி அமைப்பு ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்

புலிகளின் உடல் பாகங்களில் மூலிகை குணங்கள் உள்ளது என்ற மூடநம்பிக்கையை அகற்ற வேண்டும்; புலிகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும்; அதன் பரப்பளவை வளர்ச்சி என்ற பெயரில் நாம் குறுக்கி விடக்கூடாது; புலிகளின் உணவை வாழ்விடத்தை நாம் பறிக்கக் கூடாது என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். புலிகள் அதிகம் வாழும் பகுதிகளில் மற்ற உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

இன்று சர்வதேச புலிகள் தினம் என்பதால், சமூக வலைத்தளங்களிலும் புலிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பலரும் புலிகள் படங்களை, வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு தில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது…

2014ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 2,226 புலிகள் இருந்தன. 2018ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967. தற்போது புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் உயர்ந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. நாம் அனைவரும் புலிகளைக் காக்க கடமைப்பட்டுள்ளோம். புலிகளைக் காக்க அரசும் முழு முயற்சியில் இறங்கியுள்ளது. அரசின் நடவடிக்கை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories