கடந்த பாதை ! அருண் ஜேட்லி !


arun jetli 1 - 2026
file pic

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி. இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.

கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.

arun j1 - 2026

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி, டில்லியில் 1952 டிச., 28ல் பிறந்தார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏ.பி.வி.பி.,) தலைவராக இருந்துள்ளார்.டில்லியில் பல்கலையில் படிக்கும் போது, மாணவர் தலைவராக இருந்துள்ளார். பி.காம்., மற்றும் சட்டம் முடித்தவர்.

மாணவர் பருவத்தில் கல்வியில் சிறந்து விளங்கினார். இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையால் மாணவரணி தலைவராக இருந்த ஜேட்லி கைது செய்யப்பட்டார். 19 மாத சிறைவாசத்துக்கு பின்னர் அவர் விடுதலையாகி பாஜகவில் பல்வேறு பதவிகளில் அலங்கரித்தார். ஊழலுக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாரயணன் போராட்டத்தில் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..
arun j - 2026

ஜன சங்கத்தில் சேர்ந்த இவர், 1977 முதல் 1980 வரை டில்லி பகுதி ஏ.பி.வி.பி., தலைவராக செயல்பட்டார். கணக்கு தணிக்கையாளராக (சி.ஏ.,) விரும்பினார். ஆனால் தேர்வில் வெற்றி பெற முடியாததால், வழக்கறிஞர் துறையில் கவனம் செலுத்தினார். உச்சநீதிமன்றம் மற்றும் பல உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

1989ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். 1990ல் டில்லி உயர்நீதிமன்றத்தில் சீனியர் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். விளையாட்டு: டில்லி கிரிக்கெட் சங்க தலைவர், பி.சி.சி.ஐ., துணைத்தலைவர் மற்றும் ஐ.பி.எல்., நிர்வாக கவுன்சிலில் உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசு செயல்படுத்திய ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ள மோடியின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி இடம்பெறவில்லை. இதுதொடர்பாக, தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார்.

அருண் ஜெட்லி மத்திய அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இருந்தே அவரது உடல்நிலையில் சிக்கல் நீடித்தது. இதனால், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில்தான் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெட்லி.

02 July25 Arun Jetly - 2026
file pic

அவரது உடல்நிலை பற்றி ஆகஸ்ட் 10-ம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. அவரது உடல்நிலை மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சீராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இதையடுத்து மருத்துவமனை தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் பா.ஜ.க-வை சேர்ந்த பல தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அருண் ஜெட்லியை நேரில் சந்திக்கச் சென்றனர். அப்போதே ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்குச் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தன.

உடல்நிலை சீராக உள்ளது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 10-ஆம் தேதி தெரிவித்திருந்தார் இந்நிலையில் கடந்த 15 நாள்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 12.07 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அருண் ஜெட்லி உயிரிழந்ததை அடுத்து ஹைதரபாத் பயணத்தில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு தற்போது டெல்லி திரும்பிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடியும் விரைவில் இந்தியா திரும்புவார் என பா.ஜ.க வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.

அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தார்.



Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories