ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட A.E.கோவில் தெருவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரன் பிரச்சாரம் செய்து வந்தார். அதே பகுதியில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக பொம்மி,உமையாள் என்ற பெண் நிர்வாகிகள் மதுசூதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தனர். அவர்களைப் பார்த்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.டி.ராஜேந்திரன் உமையாள் என்ற பெண்ணின் மூக்கில் குத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட உமையாள் மற்றும் பொம்மி இருவரும் தண்டையார்பேட்டை H-3 காவல் நிலையத்தில் அமைச்சர் மீது புகார் மனு அளித்துள்ளனர்.
Popular Categories



