அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை பயன்படுத்துகின்றனர்; ரஜினி பரபரப்பு பேச்சு!


8 ஆண்டுக்கு பிறகு ரஜினிகாந்த் இன்று தான் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
அவர் இன்று முதல் 19ம் தேதி வரை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை
சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அவரை சந்திக்க ரசிகர்களுக்கு பார்கோடுடன் கூடிய அடையாள அட்டை
வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பார்கோடு அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே திருமண
மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்று குமரி, திண்டுக்கல், கரூர்
மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ரஜினி நிலையான
முடிவு எடுக்கமாட்டார், பின்வாங்குவார், தயங்குகிறார் என சிலர் கூறினார்கள்.
நல்ல படங்களை கொடுப்பேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக ஏதாவது
சொல்வார். இறைவனின் ஆசியால், உங்களின் அன்பால் அப்படி பண்ண வேண்டிய
அவசியமில்லை. படம் நல்லா இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள்.
இல்லாவிட்டால் என்ன குட்டிகரனம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.

கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் விபத்து நடந்தது. ஒரு கூட்டணிக்கு ஆதரவு
அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக என் பெயரை
சிலர் பயன்படுத்துகின்றனர்.

ரசிகர்கள் தான் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுவது
தவறில்லை. ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன சொல்வது?

ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், பணம் சம்பாதிக்க
நினைப்பவர்களை பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்றார்.

என் வாழ்க்கை அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது நடிகனாக என்னை
பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நடிகனாக நடிக்கிறேன். நாளை நான் என்ன செய்ய
வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தனது அரசியல்
பிரவேசம் குறித்து முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான்
அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கிறது என்று மீண்டும் தனது
வழக்கமான கருத்தையே தெரிவித்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories