மூடுவிழா காண்கிறது… ஹைதராபாத் ராமா நாயுடு ஸ்டூடியோ! காரணம் இதுதான்!

Published:

ramanaidu studio4 - 2026

நானக்ராம்கூடாவில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோ ஹைதராபாதில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று.

மிகப் புகழ்பெற்ற இயக்குனர் தக்குபாடி டி ராமாநாயுடு ஆரம்பித்த இந்த ஸ்டூடியோ பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 35 ஆண்டுகளுக்கு மேலாக வரலாறு கொண்ட இந்த ஸ்டூடியோ இப்போது மூடப்பட போகிறது. இந்த செய்தியை ராமாநாயுடு ஸ்டுடியோஸ் ஓனர் பிரமுக இயக்குனர் டி. ரமேஷ் பாபு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் இது உண்மை என்று இண்டஸ்ட்ரியில் பலமாக பேசப்படுகிறது.

சுரேஷ்பாபு இந்த நிர்ணயம் எடுத்துக் கொள்வதற்கு மிக முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிகிறது.

ramanaidu studio1 - 2026

முக்கியமாக விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டூடியோவை மேலும் விஸ்தரிப்பதற்காகவே ஹைதராபாதில் ஸ்டூடியோவை மூடவேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். ஆந்திர அரசாங்கம் தலைநகராக விசாகாவை அறிவித்துள்ளது என்பதால் அங்கே உள்ள ஸ்டூடியோ மீது சுரேஷ்பாபு கவனம் செலுத்த உள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவின் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய். ஆனால் இந்த ஸ்டூடியோவில் இருந்து வருடத்திற்கு வருமானம் 2 கோடி ரூ மட்டுமே வருகிறது. இந்த ஸ்டூடியோவில் சினிமா சூட்டிங்குகள் பெரிதாக நடக்க வில்லை என்பதே இதற்கு காரணம்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அதனால் இந்த மதிப்புள்ள பிராப்பர்டி மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று சுரேஷ்பாபு இந்த முடிவு எடுத்துள்ளார் என்று தெரிகிறது.

ramanaidu studio2 - 2026

ஒரு காலத்தில் ராமாநாயுடு ஸ்டூடியோஸ் வெளியில் இருந்து பார்த்தாலே தெளிவாக தெரிந்தது. ஆனால் இப்போது சுற்றிலும் பெருமளவில் ரெசிடென்சியல் அப்பார்ட்மெண்ட்ஸ் வந்துவிட்டன. இதனால் அங்கு ராமாநாயுடு ஸ்டுடியோசுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மழை பெய்தது என்றால் சிரமத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அதோடுகூட ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங் நடக்கும்போது சுற்றிலுமுள்ள அப்பார்ட்மெண்டில் இருந்து மக்கள் பார்க்கிறார்கள். தங்களுடைய செல்போன்களில் வீடியோ கூட எடுக்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பிரைவசி இல்லாமல் போகிறது. அதனால் ராமநாயுடு ஸ்டூடியோவுக்கு வரும் சினிமாக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

ramanaidu studio3 - 2026

இத்தகைய மதிப்புள்ள ஸ்டூடியோவை இடித்துவிட்டு கேட்டட் கம்யூனிடி இருக்கும் ஹவுஸிங் காலனி யாக சுரேஷ்பாபு மாற்றப் போகிறார்.

மிகவும் மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட்ஸ் கட்டப் போகிறார்கள். அதன் மூலம் வரும் வருமானத்தால் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டூடியோவை மேலும் சீரமைக்க போகிறாராம். இந்த வேலையெல்லாம் கிடுகிடுவென்று நடக்கப்போகிறது என்று கூறுகிறார்கள்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!
rana daggubatti suresh babu venkatesh - 2026

சுரேஷ்பாபு அடுத்து எடுக்கப்போகும் மைதலாஜிகல் திரைப்படத்தை விசாகப்பட்டினம் ஸ்டூடியோவில் வைத்து எடுக்க ப்ளான் செய்துள்ளாராம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img