February 22, 2026, 1:04 AM
26.7 C
Chennai

சிவகாசி அருகே பரிதாபம்… 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து… தந்தை தற்கொலை முயற்சி!

sivakasi suicide case

சிவகாசி அருகே பரிதாபம்.. மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை முயற்சி… ஒரு பெண்குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு…!

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரைச் சேர்ந்தவர் சிவமணி (35). இவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் பிரிவு அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி அதே ஊரில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு விஜயலட்சுமி (9), சிவரஞ்சனி (7), சிவபிரசாத் (4) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இன்று காலை சிவமணி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். அவரது மனைவி வழக்கம் போல பட்டாசு ஆலைக்கு சென்று விட்டார். மாலை திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்துவிட்டு, சிவமணியும் விஷம் குடித்துவிட்டு, கையை கத்தியால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

விஷம் குடித்த நான்கு பேரும் வீட்டுக்குள் மயங்கிக் கிடந்ததைப் பார்த்த அவர் அலறித் துடித்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மயங்கிக் கிடந்த நான்கு பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனளிக்காமல், சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார். மேலும் சிவமணிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories