“வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?” (தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா)

246400 479182102136836 1433845875 n 3 - 2026

“வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?”
(தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா)

.(“வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான
காரணம்”)

சொன்னவர்: ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு: வரகூரான் நாராயணன்.

அநாதரவான ஓர் அம்மையார். ஒரே பிள்ளை.

அவனுக்குத் தோல் வியாதி வந்து, மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் மடமடவென்று
பரவி விட்டது. கருமேகம், உடல் அரிக்கும், சொறிந்து கொண்டால் ரத்த விளாறு
தான். அம்மையாருக்கு
மகனின் கஷ்டத்தைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நேரே
பெரியவாளிடம் வந்து துன்பத்தை விவரித்தாள்.

“பெரியவா கிருபையாலே உடம்பு குணமாகணும். எனக்கு வேறே கதி இல்லை. வக்கும்
இல்லே…”

பெரியவா அந்த அம்மாளையும், பிள்ளையையும் மடத்திலேயே இருக்கச் சொன்னார்கள்.
பெரியவா நாள்தோறும் ஏற்றுக்கொள்கிற பிக்ஷையில் மிகுந்ததை மட்டுமே அந்தப் பையன்
சாப்பிட வேண்டும்.
வேறு எதுவும் – காபி,டீ,பால் உட்பட சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

அம்மையார் பரம சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.

பெரியவா, ‘மறு உத்தரவு வரையில்’ தன் பிக்ஷைத் திட்டத்தை சமையல்கட்டில்
சொல்லியிருந்தார்கள். வெறும் வாழைத்தண்டு மட்டும் தான் பிக்ஷை! சிறிது உப்புப்
போட்டு வேகவைத்து வைத்திருப்பார், சமையல்கார சிஷ்யர். பெரியவா அதை ஸ்வீகரித்து
விட்டு, கொஞ்சம் மோர் சாப்பிடுவார்கள்.

இதே வாழைத் தண்டும் மோரும் பையனுக்கும் கொடுக்கப்பட்டன. முதலில் அலுப்பும்
சோர்வும் தான் வந்தன. ஆனால், பெரியவா பிக்ஷை செய்த உச்சிஷ்டம் என்ற நினைவு
வந்ததும் அமுதபானமாக மகிழ்ச்சியுடன் உண்டு வந்தான்.

பத்து நாட்களுக்குப் பின், கருமையும், அரிப்பும் குறையத் தொடங்கின. நாளாக
கருமை மறைந்து தோலின் இயற்கை நிறம் வந்துவிட்டது. நாற்பது நாட்கள் ஆனபின்
கருமை மறைந்ததோடு மட்டுமில்லாமல் ரொம்பவும் தேஜஸோடு விளங்கினான் பையன்.

அவனுடைய தாயாருக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

“வேறு யாருக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும்?

என் பிள்ளைக்கு வந்த வியாதி, பாவத்தின் பயன் என்று நினைத்தேன்.இல்லை
புண்ணியத்தின் பயன் என்பது தெரிந்து போச்சு. பெரியவா உச்சிஷ்டத்தை
தொடர்ந்தாற்போல் நாற்பது நாட்கள் சாப்பிடும் பாக்கியம் வேறு யாருக்குக்
கிடைக்கும்?..” என்று புலம்பித் தீர்த்தாள்.

“எல்லாம் வாழைத்தண்டு மஹத்வம்!” என்றார்கள் பெரியவா.

“வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான
காரணம்

நெஞ்சாரச் சொன்னாள் தாயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories