December 6, 2025, 12:39 PM
29 C
Chennai

“வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?” (தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா)

246400 479182102136836 1433845875 n 3 - 2025

“வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?”
(தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா)

.(“வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான
காரணம்”)

சொன்னவர்: ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு: வரகூரான் நாராயணன்.

அநாதரவான ஓர் அம்மையார். ஒரே பிள்ளை.

அவனுக்குத் தோல் வியாதி வந்து, மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் மடமடவென்று
பரவி விட்டது. கருமேகம், உடல் அரிக்கும், சொறிந்து கொண்டால் ரத்த விளாறு
தான். அம்மையாருக்கு
மகனின் கஷ்டத்தைப் பார்த்து சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நேரே
பெரியவாளிடம் வந்து துன்பத்தை விவரித்தாள்.

“பெரியவா கிருபையாலே உடம்பு குணமாகணும். எனக்கு வேறே கதி இல்லை. வக்கும்
இல்லே…”

பெரியவா அந்த அம்மாளையும், பிள்ளையையும் மடத்திலேயே இருக்கச் சொன்னார்கள்.
பெரியவா நாள்தோறும் ஏற்றுக்கொள்கிற பிக்ஷையில் மிகுந்ததை மட்டுமே அந்தப் பையன்
சாப்பிட வேண்டும்.
வேறு எதுவும் – காபி,டீ,பால் உட்பட சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

அம்மையார் பரம சந்தோஷமாக ஒப்புக் கொண்டார்.

பெரியவா, ‘மறு உத்தரவு வரையில்’ தன் பிக்ஷைத் திட்டத்தை சமையல்கட்டில்
சொல்லியிருந்தார்கள். வெறும் வாழைத்தண்டு மட்டும் தான் பிக்ஷை! சிறிது உப்புப்
போட்டு வேகவைத்து வைத்திருப்பார், சமையல்கார சிஷ்யர். பெரியவா அதை ஸ்வீகரித்து
விட்டு, கொஞ்சம் மோர் சாப்பிடுவார்கள்.

இதே வாழைத் தண்டும் மோரும் பையனுக்கும் கொடுக்கப்பட்டன. முதலில் அலுப்பும்
சோர்வும் தான் வந்தன. ஆனால், பெரியவா பிக்ஷை செய்த உச்சிஷ்டம் என்ற நினைவு
வந்ததும் அமுதபானமாக மகிழ்ச்சியுடன் உண்டு வந்தான்.

பத்து நாட்களுக்குப் பின், கருமையும், அரிப்பும் குறையத் தொடங்கின. நாளாக
கருமை மறைந்து தோலின் இயற்கை நிறம் வந்துவிட்டது. நாற்பது நாட்கள் ஆனபின்
கருமை மறைந்ததோடு மட்டுமில்லாமல் ரொம்பவும் தேஜஸோடு விளங்கினான் பையன்.

அவனுடைய தாயாருக்கு எல்லையில்லாத சந்தோஷம்.

“வேறு யாருக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும்?

என் பிள்ளைக்கு வந்த வியாதி, பாவத்தின் பயன் என்று நினைத்தேன்.இல்லை
புண்ணியத்தின் பயன் என்பது தெரிந்து போச்சு. பெரியவா உச்சிஷ்டத்தை
தொடர்ந்தாற்போல் நாற்பது நாட்கள் சாப்பிடும் பாக்கியம் வேறு யாருக்குக்
கிடைக்கும்?..” என்று புலம்பித் தீர்த்தாள்.

“எல்லாம் வாழைத்தண்டு மஹத்வம்!” என்றார்கள் பெரியவா.

“வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான
காரணம்

நெஞ்சாரச் சொன்னாள் தாயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories