December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

கோயிலில் மது மாமிசம் உண்ட அறநிலையத் துறை பணியாளர்கள் இடைநீக்கம்!

temple-non-veg-video
temple-non-veg-video

கடலூர்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரத்தில், கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இருவரிடமும் விசாரணை நடத்த வனத்துறையும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

முன்னதாக, விருத்தாசலம் கோவில் நந்தவனத்தில், ஊழியர்கள் மது அருந்தி, மாமிசம் உண்ணும் வீடியோ வெளியாகி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் மிகவும் பிரபலமானது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பக்தர்கள் தரிசனமில்லை. வழக்கமான பூஜைகள், துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அறநிலைய துறை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

இந்த நிலையில், கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி மாமிசம் சாப்பிடுகின்றனர். ஓர் ஊழியர் மற்றவர்களிடம் மான்கறி சாப்பிடுங்கள் என்று கூறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான காட்சிகளை அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் அனுப்பியுள்ளனர்.

ஊரடங்கால் கோவிலுக்குள் செல்ல முடியாமல், பக்தர்கள் தவித்து வரும் நிலையில், கோவில் ஊழியர்களின் செயலை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து தண்டிக்க வேண்டும். அந்த கோயிலில் பல மான்கள், மயில்கள், சேவல்…

Posted by Pasuthai Ganesan on Sunday, August 16, 2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories