அமித்ஷா வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் உளறுவார்கள்: சீனிவாசன்!

prof-srinivasan-madurai
prof-srinivasan-madurai

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக வருகைக்குப் பின் திமுக.,வினர் அதிகம் இனி உளறுவார்கள் என்றார் பேராசிரியர் சீனிவாசன்.

மதுரையில் பாஜக மாநிலச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், தமிழகம் வரும் அமித்ஷா மாவட்ட மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். எந்த மாநிலத்திற்கு அமித்ஷா சென்றாலும் அங்கு வெற்றி தான். அமித்ஷா வருகைக்குபின் தமிழக தேர்தல் களம் மாறும்… என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழக தேர்தல்களம் அமித்ஷா வருகைக்கு முன், அமித்ஷா வருகைக்கு பின் என நிலவரம் மாறும். அரசியல் சூடு பிடிக்கும். எந்தெந்த மாநில மண்ணில் அமித்ஷா கால் வைக்கிறோரோ அங்கு வெற்றிதான்.

திமுகவுக்கு மோடி போபியா உள்ளது. எதற்கெடுத்தாலும் மோடி மற்றும் மத்திய அரசு தான் காரணம் என திமுக சொல்லிக் கொண்டுள்ளது… இனி திமுகவினர் அதிகமாக உளறுவார்கள். திமுகவுக்கு பயம் அதிகமாகும்.

கொரானாவால் வேல் யாத்திரை தடை என தமிழக அரசு சொன்னது நியாயமானது. ஆனால் எங்களுக்கு அது நியாயமானதில்லை. அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். நமது அம்மா பத்திரிகை சொன்னால் அதற்கான காரணத்தை அதிமுக நிர்வாகிகள் சொல்வார்கள். நமது அம்மா பத்திரிக்கை கருத்து அதிமுகவின் கருத்து தானா எனத்தெரியவில்லை. நமது அம்மா பத்திரிக்கை கருத்தை அதிமுக தலைவர்களே கூட மறுக்கலாம். அப்படி இருந்தால் கூட இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போது ஏன் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு ஏதேனும் காரணம் இருந்தால் அதிமுக அரசு தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.

ஸ்டாலினை விட அழகிரி கெட்டிக்காரர். அரசியல் சாமர்த்தியம் உள்ளவர். அழகிரி கட்சி தொடங்கினால் பாஜக வரவேற்கும். அது நியாயமானதும் கூட. அதை நான் வரவேற்பேன்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories