December 5, 2025, 1:13 PM
26.9 C
Chennai

சதியை வேரறுக்கும் சக்தி வேல்: கையில் பிடிக்க அச்சப்பட்ட கனிமொழி!

Kanimozhi-1
Kanimozhi-1

மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போதைய திமுக.,வினரின் அரசியல் நடவடிக்கையாக அமைந்துள்ள வேல் கொடுக்கும் நிகழ்வில், திமுக.,வினர் அளித்த வெண்கல வேலை கனிமொழி வாங்க மறுத்து, புறங்கையால் தள்ளிவிட்டார்.

மதுரையில் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

kanimozhi-in-madurai
kanimozhi-in-madurai

காலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அஜந்தா அப்பள நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை அஜந்தா அப்பள கம்பெனி உரிமையாளர்கள் சி.எஸ். பிரசாத், சி.எஸ். பிரதீஷ் ஆகியோர் சால்வை அளித்து வரவேற்றனர்.

kanimozhi-in-madurai1
kanimozhi-in-madurai1

அவர்களுடன் 92வது வட்ட கழக செயலாளர் பழனிசாமி, அவைத்தலைவர் குமரவேல், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் முத்து மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, விவசாய அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர்.

சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது.அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி, தி.மு.க., வட்ட செயலர் பாலு, பகுதி செயலர் சரவணன் ஆகியோர், கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். வேல் கண்டு பதற்றம் அடைந்த கனிமொழி முகத்தை சுளித்து வேலைக் கையில் வாங்க மறுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

kanimozhi-in-madurai2
kanimozhi-in-madurai2

இந்த நிகழ்வு குறித்து வட்ட செயலாளர் பாலு கூறிய போது, திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்குக் கொண்டு செல்ல வேல் செய்து, அதை ஆட்டோவில் கொண்டு சென்றோம். கனிமொழியைப் பார்க்கச் செல்லும்போது ஆட்டோவிலேயே அதை வைத்திருந்தால், யாராவது எடுத்துச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தில், அதனைக் கையில் கொண்டு சென்றோம். ஆனால் அந்த வேலினை தனக்குத் தான் கொடுக்க வருகிறார்கள் போலும் என்று கனிமொழி நினைத்துவிட்டார். அதனால் அது தனக்கு வேண்டாம் என்று மறுத்தார். ஆனால், நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை என்று கூறி சமாளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories