December 6, 2025, 5:14 AM
24.9 C
Chennai

ஆன்லைன் பட்டா வசதி! 10 மாவட்டங்களுக்கு விரிவு!

Changing-the-strap-1
Changing-the-strap-1

விழுப்புரம், வேலூர், திருவாரூர், பெரம்பூர், கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட மேலும் 10 மாவட்டங்களுக்கு ஆன்லைனில் தானாக பட்டா மாறுதல் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல் வசதிகளையும், பத்திரபதிவு வசதிகளையும் எளிதாக்குவதற்காக தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு ஸ்டார் 2.0 மென்பொருள் திட்டத்தை கொண்டுவந்தது.

இந்த முறைப்படி அசையா சொத்து குறித்த உரிமை மாற்றம் செய்யப்படும் ஆவணப்பதிவுகளின் போது சர்வே எண் உட்பிரிவு செய்ய தேவை எழாத சொத்துக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் சார்பதிவாளர் கணினிவழி ஒப்புதல் வழங்கப்படுகிறது. அதாவது முற்றிலும் இணையவழியாக பட்டா மாற்றம் மேற்கொள்ளப் படுவதை நடைமுறைப்படுத்திட அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவகங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம், வேலூர், திருவாரூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் இத்திட்டம் நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அசையாச் சொத்து பொறுத்த ஆவணம் எழுதிக் கொடுத்த நபரின் பெயரும், ஏற்கனவே வழங்கப்பட்ட இணையவழி பட்டாவில் கண்டுள்ள நில உரிமையாளர் பெயரினையும் ஒப்பீடு செய்து இரண்டும் ஒன்றாக இருக்கும் நிகழ்விலேயே தானாக பட்டா மாறுதல் குறித்த ஒப்புதல் குறியீடு சார்பதிவாளரால் வழங்கப்பட வேண்டும்.

Online-strap
Online-strap

இணையவழி சிட்டாவில் கண்ட பட்டாதாரர் இறந்த வாரிசுதாரர்களால் ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட்டுப்பட்டாடி பட்டாதாரர் பெயரும் ஆவணத்தில் கண்ட விற்பனை செய்பவரின் பெயரும் ஒன்றாக இல்லாமல் மாறுபட்ட நிலையில் தானாக பட்டா மாறுதலுக்கு சார்பதிவாளரால் ஒப்புதல் வழங்குவது தவறானது.

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தை தொடர்ந்து தானாக பட்டா மாறுதல் நடைமுறை பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு 8.2.2021 முதல் விரிவுபடுத்தப்படுகிறது. உரிய கவனமின்றி அரசின் திட்டத்திற்கு குந்தமாக சார்பதிவாளர்கள் செயல்படுவது பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories