February 21, 2026, 6:39 PM
29 C
Chennai

2015க்குப் பின்… மீண்டும் ஒரு கனமழை! மிதக்கும் சென்னை! பள்ளிகள் விடுமுறை!

chennaifloods 1
chennaifloods 1

2015 ஆம் வருடம் சென்னை நகரை மூழ்கடித்த பெரு மழையைப் போல தற்போதும் கனமழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது மேலும் நவம்பர் 10 நாளை மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை வாசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் 21செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை நகரின் தெற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகளவு இல்லை. சென்னையின் மத்திய மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தி்ல் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், தற்போது மழை குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக மழைபெய்வதற்கு உயர் காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக இருந்தது. இது தற்போது தெற்கே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் சில நேரங்களில் மிகக் கனமழை பெய்யும். பாண்டிச்சேரிக்கு தெற்கே இன்று கனமழை பெய்யக்கூடும். எனினும் காலை நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

இதனிடையே, தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்யும் என்பதால், சென்னை உள்ளிட்டபல மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மதுரை விழுப்புரம் மயிலாடுதுறை திருநெல்வேலி தென்காசி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டிணம் ராமநாதபுரம் விருதுநகர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories