December 8, 2025, 3:27 AM
22.9 C
Chennai

2015க்குப் பின்… மீண்டும் ஒரு கனமழை! மிதக்கும் சென்னை! பள்ளிகள் விடுமுறை!

chennaifloods 1
chennaifloods 1

2015 ஆம் வருடம் சென்னை நகரை மூழ்கடித்த பெரு மழையைப் போல தற்போதும் கனமழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது மேலும் நவம்பர் 10 நாளை மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் சென்னை வாசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் 21செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை நகரின் தெற்கு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகளவு இல்லை. சென்னையின் மத்திய மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தி்ல் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், தற்போது மழை குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் வெள்ளம் வடிந்து வருகிறது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக மழைபெய்வதற்கு உயர் காற்றழுத்த சுழற்சி மண்டலம் காரணமாக இருந்தது. இது தற்போது தெற்கே நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் சில நேரங்களில் மிகக் கனமழை பெய்யும். பாண்டிச்சேரிக்கு தெற்கே இன்று கனமழை பெய்யக்கூடும். எனினும் காலை நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.

இதனிடையே, தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை, மதுரை உள்ளிட்ட 17 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் நான்கு நாட்களுக்கு இடைவிடாமல் மழை பெய்யும் என்பதால், சென்னை உள்ளிட்டபல மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்தும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மதுரை விழுப்புரம் மயிலாடுதுறை திருநெல்வேலி தென்காசி சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகபட்டிணம் ராமநாதபுரம் விருதுநகர் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories