ராஜஸ்தானில் இந்திய ராணுவ வீரர் போல் வலம் வந்து , ரகசிய தகவல்களை திருடி பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்த ஐ.எஸ்.ஐ உளவாளி கைது செய்யப்பட்டுளார்.
இதுவரை 900 ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்ததாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவுத்துறையைச் சேர்ந்த சக்திபால் சக் என்ற அந்த நபர், ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஒரு சிறிய ஊரில் தங்கி, ராணுவ உடையில் சென்று ராணுவ வீரர்களுடன் பழகி அவர்களது நட்பு கொண்டிருக்கிறார்.
பின்னர் இந்திய ராணுவ ரகசியங்களை திருடி, பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்திருக்கிறார். உளவுத்துறை டைரக்டர் ஜெனரல் உமேஷ் மிஸ்ராவின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நபரை ராஜஸ்தான் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
சக்திபால் சக்கிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 900 ரகசிய ஆவணங்களை திருடி பாகிஸ்தானுக்கு அனுப்பியது தெரியவந்திருக்கிறது.
மேலும் இராணுவ வாகனங்களின் புகைப்படங்கள், ரகசிய ஆவணங்கள் போன்றவை அவருடைய மொபைலில் சேமித்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.