செவ்வாய் கிரகத்திற்குப் படை எடுக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் கவனம் இப்போது எலோன் மஸ்க் மீது திரும்பியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்கனவே மிகவும் தீவிரமாகச் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகளைக் கண்டறிவதில் வேலை செய்து வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியங்களை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் சமீபத்தில் கண்டறிந்தது மற்றும் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திரவ நீர் செவ்வாயில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையைச் சேர்த்து. இதனால், மனிதர்களைச் செவ்வாய் கிரகத்தில் வாழ வைப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சியில் அதிக வேகத்துடன் நடைபெறத் துவங்கியுள்ளது.
இந்த வரிசையில், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் ஒவ்வொரு கருத்தாக வெளிப்படுத்தி வரும் நேரத்தில், எலோன் மஸ்க் அனைவரின் கவனத்தையும் நிற்கும் விதத்தில் ஒரு முழுமையான திட்டத்தின் செயல்பாட்டை விளக்கும் பதிவை வெளியிட்டுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான ஒரு முழுமையாகத் திட்டத்தை எலோன் மஸ்க் தற்போது அறிமுகம் செய்துள்ளார்.
செவ்வாய் கிரகத்திற்கு பூமி வாசிகள் எப்படி அழைத்துச் செல்லப்படுவார்கள், இதற்கான பிரத்தியேகமான ஸ்டார்ஷிப் எப்படி செயல்படும், செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் தரையிறங்கும் ராக்கெட் தளம் எங்கு அமைக்கப்படும், பூமியில் இருந்து பயணிக்கும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் எங்குத் தங்குவார்கள் என்பது போன்ற தகவல்கள் இந்த பதிவில் காட்டப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் தனது லட்சியமான ஸ்டார்ஷிப் விண்கலத்தின் முதல் சுற்றுப்பாதை ஏவலில் தனது கண்களை அமைத்துள்ள நிலையில், எலோன் மஸ்க் விண்கலத்தில் செவ்வாய் கிரகத்தை அடையும் திட்டத்தைப் பற்றி பூமி வாசிகளுக்கு ஒரு தெளிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
வணிக விண்வெளி பயணத்தில் புரட்சியை ஏற்படுத்திய கோடீஸ்வர நிறுவனர், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் எப்படி இருக்கும் என்பதற்கான உருவகப்படுத்துதலை தற்போது இந்த மூலம் வெளியிட்டுள்ளார்.
செவ்வாய் கிரக உருவகப்படுத்துதலை வெளியிட்ட பிறகு ஒரு ட்வீட்டில், “இது எங்கள் வாழ்நாளில் உண்மையாக இருக்கும்” என்று மஸ்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அர்த்தம், வெகு விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இதுவரை கட்டப்பட்ட உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பின் வளர்ச்சி குறித்த விவரங்களைக் கடந்த வாரம் மஸ்க் வெளியிட்டிருந்தார். SpaceX இன் டெக்சாஸ் ஸ்பேஸ்போர்ட்டில் 390 அடி (119-மீட்டர்) ராக்கெட்டுக்கு அருகில் நின்று, மஸ்க் இதைக் கூறினார்.
“இதை உண்மையாக்குவோம்! இது உண்மையில் ஒரு விசித்திரமான விஷயம் தான். இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால், இது உண்மையிலே உண்மையான விஷயம் தான்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
SpaceX இன் சூப்பர் ஹெவி முதல் நிலை பூஸ்டர் இன்னும் வெடிக்கவில்லை. ஆனால் ஃபியூச்சரிஸ்டிக், புல்லட் வடிவ, எஃகு ஸ்டார்ஷிப் தயாராகியுள்ளது.
இந்த ஸ்டார்ஷிப் மேல் கட்டமாகச் செயல்படுகிறது. கடந்த மே மாதம், தொடர்ச்சியான கண்கவர் வெடிப்புகளைத் தொடர்ந்து, இது வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்டார்ஷிப் சோதனை வெற்றியா? எவ்வளவு தூரம் பறந்தது?
ஏவப்பட்ட ராக்கெட், அதன் சொந்த தரையிறங்கு தளத்தில் வெற்றிகரமாக மீண்டும் தரையிறங்கி சோதனை ஓட்டத்தை வெற்றியாக்கியது.
ராக்கெட்ஷிப் 6 மைல்களுக்கு (10 கிலோமீட்டர்) மேல் உயர்ந்து பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எலோன் மஸ்கின் கூற்றுப்படி, ஒரு ஸ்டார்ஷிப் ஏவுதல் 10 மில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் முடிவடையும் என்று மஸ்க் மதிப்பிட்டுக் கூறியுள்ளார்.
இது ஒரு சில மில்லியன் டாலர்கள் அதிக விமான விகிதத்துடன் கூட ஒப்பிடுகையில், அதன் விலைகளைக் குறைக்கும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.
தற்போதைய விண்வெளி தரத்தின்படி அவர் இதை “மிகவும் குறைவு” மற்றும் “சிறப்பானது” பயணமாக மாறும் என்று குறிப்பிடுகிறார்.
SpaceX ஆனது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து Falcon-9 என்ற தனது பணிக்குத்திரையை வாரத்திற்கு ஒருமுறையாவது ஏவுவதன் மூலம் செயல்பாடுகளை அதிகரித்து வருகிறது.
எலோன் மிஸ்கின் நிறுவனம், Starlink விண்மீன்கள் மற்றும் சரக்குகளைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தொடர்ந்து பயணம் செய்து வருகிறது.
முன்னெப்போதையும் விட, சர்வதேச விண்வெளி நிலையங்களுக்குத் தேவையான விஷயங்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் செய்து முடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவில் எலோன் மஸ்க் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள செவ்வாய் கிரகத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றிய உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.