நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு…

பரபரப்பான‌சூழலில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எண்ணும் பணி இன்று துவங்கியது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை துவங்கி மும்மரமாக நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படுகிறது.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது, எதிர் கட்சி தலைவரின் பரபரப்பான பேட்டியால் பரபரப்பு நிலவியது.இதனால்
வாக்கு எண்ணிக்கைக்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

பகல் 12 மணியளவில், வெற்றி நிலவரங்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேற்பாா்வையாளா், ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை விவரங்களை தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க மாநகராட்சி, நகராட்சிகளில் 3 மேஜைக்கு ஓா் உதவியாளா், பேரூராட்சிக்கு ஓா் உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநகராட்சிகளில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 நுண் பாா்வையாளா்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் ஓா் அறைக்கு ஒரு நுண் பாா்வையாளா் என மொத்தம் சுமாா் 30 ஆயிரம் அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். வாக்குகள் எண்ணப்பட்டு வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

268 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் அசம்பாவிதத்தை தடுக்க மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. தடையில்லா மின்சாரம், கணினி, இணையதள வசதி, காவல் துறை, வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  T20 WC 2026: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

வேட்பாளா்கள், முகவா்கள் காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைப்பேசிகள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.ஊடகவியலாளா்கள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கைப்பேசி கொண்டு வர அனுமதிக்கப்படுவா். மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள முகவா் அடையாள அட்டை கொண்டு வராதவா்களும், முகக் கவசம் அணிந்து வராதவா்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருவதற்கு அனுமதி இல்லை.தோ்தல் முடிவுகளை இணையதள முகவரி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

09 53 49 kumari - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories