December 6, 2025, 3:09 AM
24.9 C
Chennai

திருமலை திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..

திருமலையில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று சனிக்கிழமை  மட்டும் 67,750 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 30,192 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.13 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது.

கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து களைகட்ட தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் அதிகபட்சமாக 67 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிலையில் திருமலை திருப்பதியில் கடந்த மாதம் 25-ந்தேதி அதிகபட்சமாக ரூ.5.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது குறிப்பிடத்தக்கது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தொற்று பரவல் குறைந்ததால் ஜூன் மாதம் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

மேலும் திருப்பதியில் ஊரடங்கு அமலில் இருந்ததால் குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி திருப்பதி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது. முதலில் ரூ.300 கட்டணத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டு 3 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். முதலில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் திகரிக்கப்பட்டுள்ளது.

images 26 1 - 2025

தற்போது ரூ.300 இலவச தரிசன டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்களும், நேரடி இலவச தரிசனத்தில் 30,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு எந்த அளவுக்கு இருந்ததோ அதேபோல் வழக்கமான சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories