![மதுரை அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாய்க்கு அரசுப் பணி! 1 justice for madurai girl](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/justice-for-madurai-girl-1024x576.jpg)
மதுரை அருகே சிறுமி உயிரிழந்த விவகாரம்: தாயுக்கு அரசு பணி:
மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சபரிக்கு ,அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலவளவு அரசு துவக்கபள்ளியில், சமையலராக நியமிக்கப்பட்ட பணி ஆணையை, மேலூர் வட்டாட்சியர் இளமுருகன், நேரில் சென்று வழங்கினார்.
இறந்த சிறுமி பிரச்ணையில், ஏற்கெனவே 8 பேர் மீது மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர். மேலும், இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க பாஜகவினர், மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.