நகர்புற உள்ளாட்சி காலியாக உள்ள பதவி இடங்களுக்கு மார்ச்26-ல் மறைமுகத் தேர்தல்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு வருகிற 26-ந்தேதி சனிக்கிழமை நகராட்சி, பேரூராட்சி மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு மற்றும் போலீஸ் பாதுகாப்போடு அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு மாநில தேர்தல் செயலாளர் சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மறைமுக தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடத்தப்படாமல் உள்ள தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு இவ்வாணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம் மற்றும் தேர்தல் பார்வையாளரை நியமனம் செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மறைமுகத் தேர்தல்கள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பது, மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாளை (23-ந்தேதி) தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் அமைதியாக நடத்துவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வருகிற 30-ந்தேதி (புதன் கிழமை) நடைபெற உள்ள வார்டு குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் மற்றும் 31-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ள வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், ஒப்பந்தக்குழு உறுப்பினர் மற்றும் நிலைக் குழு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் சி.சி.டி.வி. பதிவு, காவல்துறையினரின் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதை உறுதி செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories