பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!

Published:

selam aughavaneswarar - 2026

சேலம் ஒரு வளமான வரலாற்று பாரம்பரியத்தை கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இது பல வரலாற்று வம்சங்களால் ஆளப்பட்டது மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றிய பல்வேறு முக்கியமான காட்சிகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது

இந்த வம்சத்தினர் சேலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு கோவில்கள் மற்றும் கோட்டைகளை கட்டியுள்ளனர். அதில் ஒன்று சுகவனேஸ்வரர் கோவில்.

சுகவனேஸ்வரர் கோவில் முக்கிய தெய்வம் சுகவனேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன்.

லிங்க வடிவில் உள்ள சிவன். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், லிங்கத்தின் பாகம் சற்று சாய்வாக உள்ளது.

மேலும், லிங்கத்தின் மேற்பகுதியில் சிறிய வெட்டு உள்ளது. ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

aughavaneswarar kovil - 2026

மேலும், பிரதான கோவிலில், சுகவனேஸ்வரரின் உலோக உர்ச்சவ விக்ரஹத்தை நீங்கள் காணலாம். மிகவும் பழமையான சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
aughavaneswarar - 2026

மேலும் இது தொடர்பாக ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள டி.ஆர்.ரமேஷ் அவர்கள் இந்த கோவிலில் பழமையான சிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

மேலும் பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது போன்று கேள்வியும் அவர் எழுதியுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை தண்டிக்கப் படுவார்களா இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img