December 8, 2025, 6:58 PM
25.6 C
Chennai

தமிழகத்தில் 10 கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வடபழநி , திருச்செந்தூர் , சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார்.

அருள்மிகு வட பழநி ஆண்டவர் கோயிலில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த நிகழ்ச்சி நடந்தது.
வட பழநி முருகன் கோயில் , மதுரை மீனாட்சி அம்மன் கோயில் , திருச்செந்தூர் முருகன் கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில். மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், பழநி, திருவேற்காடு, திருத்தணி , உள்ளிட்ட 10 கோயில்களில் இந்த திட்டம் இன்று முதல் துவக்கப்படுகிறது.

திட்டத்தை துவக்கி வைத்த இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது,

கடந்த சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்தப்படி 10 திருக்கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் வழிகாட்டுதலின்படி வடபழநி திருக்கோயிலில் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு துணையாக இருந்த சுற்றுலா மற்றும் கலை பண்பாடு ,இந்து சமய அறநிலையத்துறை செயலர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷ்னர் குமரகுருபரன், உட்பட அனைவரையும். பாராட்டுகிறோம்‌.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்பர் . எங்கள் ஆட்சியில் 254 கோயில்களில் அன்னதான திட்டம் சிறப்பாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பிரசாதம் திட்டம் மூலம் வட பழநி கோயிலில் சாதாரண நாட்களில் 5 ஆயிரம் பக்தர்கள், விசேஷ நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் , கிருத்தியை நாட்களில் 25 ஆயிரம் பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்படும்.

அறிவித்தப்படி வட பழநி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் , ஊரடங்கு இருந்த நேரத்திலும் எடுத்துக்கூறிய போது முதல்வர் அறிவுரையின் படி குடமுழக்கு சிறப்பாக நடத்தப்பட்டது.

பழநி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தற்போது சீர்படுத்தி, முறைப்படுத்தி மேலும் 3 திருக்கோயில்களில் அமல்படுத்தப்பட்டது.திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூரில் முழு நேர அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் பேர் வரை நாள்தோறும் வழங்கப்படுகிறது. வயிற்றுப்பசியே போக்கும் நல்ல நிகழ்வாக இறை அன்பர்கள் மகிழ்வு பெறும்வரையில், எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து நடத்தப்படும். திருக்கோயில் சீர்படுத்த 100 கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எங்கள் ஆட்சியில் கோயில் மூலம் வரும் 150 கோடி வாடகை தொகையை வசூலித்து சாதனை படைத்துள்ளோம்.கோயில் அன்னதான திட்டத்திற்கு ஆன்லைனில் நன்கொடையாக ரூ. 2 கோடியை தாண்டியுள்ளது. தர்மத்திற்கு பேர் போன நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர்.

முதல்வர் 4 கால் பாய்ச்சலாக தமிழக கோயில்களுக்கு 129.50 லட்சம் கோடியை ஒதுக்கினார். கோயில் அலுவலர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதாமாதம் ஆயிரம் வழங்க உத்தரவிட்டார். அர்ச்சகர், பக்தர்கள், இறையன்பர்கள் பயன்பெறும் வகையில் ஆட்சியின் ஆன்மிக பயணம் இடையூறு மத்தியில் தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்

பிரசாதம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வட பழநி கோயிலை தேர்வு செய்தமைக்காக இணை ஆணையர் ரேணுகா நன்றி தெரிவித்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் மேற்கூறிய 10 கோயில் இணை ஆணயைர்கள் நன்றி தெரிவித்தனர்.

நாள் முழுவதும் பிரசாதம் இலவசமாக வழங்கும் திட்டத்தில் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, லட்டு, எலுமிச்சை சாதம், அதிரசம், புட்டமுது, தேன்குழல் முருக்கு போன்றவை வழங்கப்படும் என்றார் அமைச்சர் சேகர் பாபு.

images 84 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

Topics

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories