நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டிலுக்கும் ரூ10 கூடுதலாக வசூலிக்க உத்தரவு..

நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கபடும். காலி மதுபாட்டில்களை திரும்ப கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்று கொள்ளுமாறு  தமிழக அரசு அறிவித்துள்ளது.

மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வன பகுதிகளில் காலி மதுபாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுசூழல் மாசுபடுவதுடன் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் தமிழக அரசுக்கு சென்னை  உயர் நீதிமன்ற அமர்வுவலியுறுத்திருந்தது.

நீலகிரி உள்ளிட்ட மலை மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலி மது பாட்டில்களை வன பகுதிகளில் வீசுவதால் சுற்று சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் மலை பிரதேசங்களில் உள்ள மதுபான கடைகளை மூடுமாறு உத்தரவிட வேண்டி நிலை ஏற்படும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எச்சரிக்கைவிடுத்தது. குறிப்பாக ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றமே அவற்றை மூட உத்தரவிட வேண்டிய நிலை வரும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இதனையடுத்து மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் விற்பனை செய்யபடும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அடையாளமாக சீல் வைப்பதுடன் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபாட்டில்களை வாங்கி செல்பவர்கள் காலி மதுபாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெற்றுகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உத்தரவை தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரன் தமிழக டாஸ்மார்க் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியதுடன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

IMG 20220408 WA0068 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories