பிரதமர் நரேந்திர மோடிக்கு லதா மங்கேஷ்கர் விருது இன்று வழங்கப்பட்டது
சாதனை படைத்தவர்களை கௌரவிக்க மறைந்த இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் சாதனையை போற்றும் வகையில், இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதமரின் பங்களிப்பை கௌரவிக்க இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பெறும் முதல் நபர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வென்றது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், இந்த விருதினை பெருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்காக லதா மங்கேஷ்கர் கனவு கண்டார். நாட்டின் வளர்ச்சிக்கும் அவர் பங்களித்தார். அவர் பெயரில் விருது பெருவதை நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்றார்.





