இபிஎஸ்யை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை-புகழேந்தி..

images 2023 03 02T173158.651 - 2026

எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 11 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்ற வாக்குகள் 32,360 ஆகும். அதிமுக வேட்பாளரைவிட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியாகியுள்ளது. இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து திமுக கூட்டணி கொண்டாடி வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காட்டுகிறது. நாளை நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே கதிதான். கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் தோற்றது 8904 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே.

அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி செயல்பாட்டால் சோர்வடைந்துள்ளனர். ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக இல்லை; ஓபிஎஸ் இல்லாவிட்டால் ஒரு வெற்றி கூட பெற முடியாது. தற்போதாவது உண்மை நிலவரத்தை பழனிசாமி தெரிவித்துக்கொள்ள வேண்டும் என்று ஓபன்னீர்செல்வம் தரப்பு விமர்சனம் செய்தது.

டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு வரும் என்று அன்றே சொன்னேன். எடப்பாடி பழனிச்சாமி பேசியதை ஈரோடு மக்கள் ரசிக்கவில்லை. தோல்வியில் துவண்டு போயிருக்கிற அதிமுக தொண்டர்கள் கண்ணில் கண்ணீர் வருகிறது. ஓ.பன்னீர்செல்வதை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச வேண்டும் எனவும் புகழேந்தி வலியுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Entertainment News

Popular Categories