செங்கல்பட்டு அருகே பாரதமாதா கோயில்: குடமுழுக்கு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

bharathamatha temple - 2026
#image_title

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் ஆசிரமத்தில், பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது. 300 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன 9 அடி உயர பாரத மாதா சிலை அகண்ட பாரத வரைபடத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம், சித்ரா பௌர்ணமி தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தேசியத் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், சாஸ்திராலயம் ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்ம யோகானந்தா உள்பட பலர் பங்கேற்றனர்.

பாரத மாதா வேடமணிந்த நூற்றுக்கும் அதிகமான சிறுமியர், பாரத மாதா சிலைக்கு தீபராதனை காட்டினர்.

இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “மொழி, உணவு, உடை, வழிபாட்டு முறைகள் என, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா எப்போதும் ஒரே நாடு தான்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இமயம் முதல் ஹிந்து சமுத்திரம் வரை உள்ள, இந்த பாரத நிலப்பரப்பு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது. நிலப் பரப்பில் இந்தியா பல நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தாலும், தர்மத்தால் அகண்ட பாரதமாகவே உள்ளது. ‘உலகிற்கு வழிகாட்டியாக இந்தியா இருக்கும்’ என, மகான் அரவிந்தர் கூறினார். நாட்டின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை, நம் நாட்டை விட்டுப் பிரிந்து சென்றவர்களை திரும்பி வர வைக்கும்.

இங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு செல்லாமல், இந்தியா எங்கள் நாடு என்று வாழ்ந்து வருகின்றனர்.

உண்மை, அன்பு, தூய்மை, தவம் ஆகிய நான்கு தூண்களில் இந்தியா நிற்கிறது. அகண்ட பாரதம் உருவாக வேண்டும் என்பதற்கான அடையாளமாகவே பாரத மாதா சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories