செங்கல்பட்டு அருகே பாரதமாதா கோயில்: குடமுழுக்கு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

bharathamatha temple - 2026
#image_title

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் ஆசிரமத்தில், பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது. 300 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன 9 அடி உயர பாரத மாதா சிலை அகண்ட பாரத வரைபடத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம், சித்ரா பௌர்ணமி தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தேசியத் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், சாஸ்திராலயம் ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்ம யோகானந்தா உள்பட பலர் பங்கேற்றனர்.

பாரத மாதா வேடமணிந்த நூற்றுக்கும் அதிகமான சிறுமியர், பாரத மாதா சிலைக்கு தீபராதனை காட்டினர்.

இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “மொழி, உணவு, உடை, வழிபாட்டு முறைகள் என, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா எப்போதும் ஒரே நாடு தான்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இமயம் முதல் ஹிந்து சமுத்திரம் வரை உள்ள, இந்த பாரத நிலப்பரப்பு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது. நிலப் பரப்பில் இந்தியா பல நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தாலும், தர்மத்தால் அகண்ட பாரதமாகவே உள்ளது. ‘உலகிற்கு வழிகாட்டியாக இந்தியா இருக்கும்’ என, மகான் அரவிந்தர் கூறினார். நாட்டின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை, நம் நாட்டை விட்டுப் பிரிந்து சென்றவர்களை திரும்பி வர வைக்கும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு செல்லாமல், இந்தியா எங்கள் நாடு என்று வாழ்ந்து வருகின்றனர்.

உண்மை, அன்பு, தூய்மை, தவம் ஆகிய நான்கு தூண்களில் இந்தியா நிற்கிறது. அகண்ட பாரதம் உருவாக வேண்டும் என்பதற்கான அடையாளமாகவே பாரத மாதா சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories