December 6, 2025, 3:26 AM
24.9 C
Chennai

கம்பம் நகருக்குள் நுழைந்த அரிசி கொம்பன் மக்கள் ஓட்டம்..

IMG 20230527 WA0087 - 2025
#கம்பம் நகருக்குள் நுழைந்த அரிசிக்கொம்பன்

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் இன்று காலை காட்டுயானை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரிசி கொம்பன் என்னும் காட்டுயானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். ரேஷன் கடைகளை சேதப்படுத்திஅரிசி உள்ளிட்டவற்றை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் அரி கொம்பன் யானை என்ற பெயரிட்டு அழைத்தனர்.

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி லாரியில் ஏற்றி தமிழக கேரள எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் அருகே முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

16851707491138 - 2025
#image_title

மயக்க ஊசியின் தாக்கத்தில் இருந்த இந்த யானை சில நாட்களில் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பின்னர் தமிழக எல்லையான கண்ணகி கோயில் பகுதிக்கு சென்றது. தொடர்ந்து மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது.

ஹைவேவிஸ் சாலையில் வந்த அரசு பேருந்து மற்றும் மணலாறு பகுதியில் உள்ள ரேஷன் கடையை அடுத்தடுத்து தாக்கியது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த யானை குமுளி அருகே ரோசாப்பூக் கண்டம் எனும் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. பின்பு குமுளி மலைப்பாதை வழியே தமிழகப் பகுதியான லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலைய பகுதிக்கு சென்றது.

இந்த யானை கேரள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து விடும் என்று பலரும் எண்ணிய நிலையில் இன்று (மே 27) காலை இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. கூடலூர் மெயின் சாலையில் வந்த இந்த யானை மின்அலுவலகம் அருகே சென்றது. இதனைப்பார்த்த பொதுமக்கள் காவல் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரும் கூச்சலிட்டனர்.

இதனால் பொதுமக்கள் ஓடி ஒளிந்தனர். வாகனங்களின் மூலமாகவும் ஹார்ன் ஒலியை அதிக சப்தத்தில் ஒலிக்கச் செய்து பொதுமக்களை விலகிச் செல்லும் படி வலியுறுத்தினர்.வீட்டை விட்டு யாரும் வரவேண்டாம் என்று போலீஸார் ஒலிபெருக்கியில் எச்சரித்தபடியே யானையின் பின்னால் சென்றனர்.

தொடர்ந்து கம்பம் நகரின் பல்வேறு தெருக்களுக்குள்ளும் யானை சுற்றிக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அதனை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை போலீஸாரும், வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories