December 6, 2025, 6:24 AM
23.8 C
Chennai

பட்டியலில் பெயர் இல்லை; வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசிய மக்கள்!

election voting - 2025

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஆதரவாக திரண்ட கிராம மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஏ ராமலிங்கபுரம் கிராமத்தில் மொத்தம் 1016 வாக்குகள் உள்ளன. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காதால் அவர்கள் பெயர் வாக்காளர் அடையாள அட்டையில் இல்லை
எனவே அவர்களுக்கு நேற்று அந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியவில்லை.

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வாக்குகள் செலுத்த அனுமதி இருந்தும் சுமார் 200 பேருக்கு வாக்களிக்க அனுமதி இல்லை என்ற காரணத்தினால் தாங்களும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறி அந்தப் பகுதியில் திரண்டனர்.

நேரம் செல்ல செல்ல பொது மக்களின் கூட்டம் அதிகமானது அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது மேலும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்களிக்க முடியவில்லை எனவே வாக்காளர் அடையாள அட்டை எங்களுக்கு எதற்கு என்று கூறி சிலர் சாலையில் எறிந்தனர்

இது பற்றி தகவல் கருத்துடன் திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் சிவகாசி சப் கலெக்டர் விசுவநாதன் உதவி தேர்தல் அதிகாரி கணேசன் தாசில்தார் மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர் மலர் பாண்டியன் உட்பட அதிகாரிகள் எ ராமலிங்கபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

மேலும் திரண்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் நடத்தி வாக்களிக்க இயலாதவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

மேலும் சுமார் 200 பேர் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரண்டு இருந்த பொதுமக்களிடம் எடுத்து கூறினர் இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சமாதானம் அடைந்தனர்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனக் கூறி வாக்காளர் வாக்களிக்காத முடியாதவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க உரிமை உள்ளவரிடம் சேர்ந்து நேற்று சுமார் 3 மணி நேரம் ஓட்டு போடாமல் சாலையில் திரண்டிருந்தது ஏ ராமலிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories