May 19, 2025, 10:17 PM
29.2 C
Chennai

ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி! அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

sengottai rss rout march
#image_title

தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் அரசுக்கு சில கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் நேற்றைய விசாரணையின் போது 42 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தமிழக அரசும், போலீசாரும் கண்ணாமூச்சி ஆடுவதாக கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும், நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்றும், தி.மு.க., பவள விழாவுக்கு மட்டும் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கியது எப்படி என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி முடிவு எடுத்து இன்று தெரிவிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 42 இடங்களுடன் கூடுதலாக மேலும் 10 இடங்களுக்கு அனுமதி தரப்படுவதாகவும், 6 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தமிழக அரசின் சாபில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

இதை அடுத்து நிபந்தனைகள் அடிப்படையில் மொத்தம் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி, கொள்கை மாறுபாடு கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி என்று கூறி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கக் கூடாது. நிபந்தனைகளுடன் 6 இடங்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 58 இடங்களிலும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்தப் புதிய நிபந்தனைகளையும் விதிக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க மறுக்கக்கூடாது என்று தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories