₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

petrol diesel price1 - 2026
  • கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை பெருமளவில் உயர்ந்து, ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து 122 டாலர் வரை சென்றுள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 30%-50%, வட அமெரிக்காவில் 30%, ஐரோப்பாவில் 20% மற்றும் ஆப்பிரிக்காவில் 50% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இழப்புச் சுமை குறைக்கப்படுவதுடன், நுகர்வோருக்கு நேரடி விலை உயர்வு தாக்கம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

லிட்டருக்கு ரூ.13ஆக இருந்த பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.3ஆக குறைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 10 ரூபாயாக இருந்த டீசல் மீதான கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி குறிபிட்டுள்ள தகவல்: பிரதமர் மோடி அரசுக்கு இரண்டு விருப்பங்கள் இருந்தன. மற்ற நாடுகளைப் போலவே இந்திய மக்களுக்கான எரிபொருள் விலைகளை கடுமையாக உயர்த்துவது அல்லது சர்வதேச சந்தை மாற்றங்களிலிருந்து இந்திய மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசின் நிதியில் சுமையை ஏற்பது.

ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக அரசின் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்திய மக்களை பாதுகாக்க அரசின் நிதியில் சுமையை ஏற்கும் முடிவை மீண்டும் எடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் விலை உயரும் நேரத்தில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் பெரிய இழப்புகளை (பெட்ரோலுக்கு சுமார் லிட்டருக்கு ₹24 மற்றும் டீசலுக்கு ₹30) குறைக்கும் வகையில், அரசு தனது வரிவசூலில் பெரிய அளவில் இழப்பை ஏற்றுள்ளது.

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories