வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 30 ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 30 காலை 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

vaigai - 2026மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொட்டி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திருவிழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 28-ம் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். வழியில் பல மண்டகப்படிகளில் தங்கி அவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

28-ம் தேதி தங்கப் பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மறுநாள் 29-ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வீதியுலா செல்லும் கள்ளழகர் 30-ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு வண்டியூர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பிறகு ராஜாங்க திருக்கோலத்தில் 2-ம் தேதியும், 3-ம் தேதி பூப்பல்லக்கிலும் காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

4-ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு செல்ல 5-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories