February 23, 2026, 8:34 PM
27.2 C
Chennai

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த தமிழக காவல் துறை !

 
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
டாஸ்மாக் மதுக்கடை கடையின் அருகே பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.
 
எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர்.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டவாறே கடையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் காவல் துறையினர்போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் மதுக்கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும், தரையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆண்கள் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதும், சில பெண்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு 7 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories