December 7, 2025, 1:22 AM
25.6 C
Chennai

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த தமிழக காவல் துறை !

 
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
டாஸ்மாக் மதுக்கடை கடையின் அருகே பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.
 
எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர்.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டவாறே கடையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் காவல் துறையினர்போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் மதுக்கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும், தரையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆண்கள் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதும், சில பெண்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு 7 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories