டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரியவர்கள் மீது தடியடி நடத்தி கைது செய்த தமிழக காவல் துறை !

 
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை போராட்டம் நடத்திய ஜனநாயக மாதர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தி 55 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
டாஸ்மாக் மதுக்கடை கடையின் அருகே பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. எனவே, இந்த மதுக்கடையை அகற்றக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை.
 
எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் டாஸ்மாக் கடை அருகே திரண்டனர்.
அனைத்திந்திய மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜோதிலட்சுமி உள்பட நிர்வாகிகள் பலர் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கோஷமிட்டவாறே கடையை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸ்தம்பட்டி போலீஸ் உதவி ஆணையாளர் உதயகுமார் மற்றும் காவல் துறையினர்போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யப்போவதாக கூறினர்.
ஆனால் மதுக்கடையை இடமாற்றம் செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
உடனே போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும், தரையில் அமர்ந்து காவல் துறையினரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கைகளை கோர்த்தபடி ஆண்கள் சாலையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீதும், சில பெண்கள் மீதும் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரையும், பெண்களையும் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீசார் அவர்களை கைது செய்தனர். இவ்வாறு 7 பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories