ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளும் : தமிழிசை சவுந்தரராஜன்

Published:

 
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் தைப் பொங்கல் தமிழர் கலாச்சார விழா தமிழக பாரதீய ஜனதா சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
 
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.மேலும், ஈவிகேஎஸ் மத்திய அரசு மீது குறைகூறுவதை நிறுத்திவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்றார்.
 
அடுத்த ஆண்டு முதல் முழு தடையையும் நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழக பாரதீய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img