சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ள அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்காக 720 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகள், பட்டயபடிப்பு முடித்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் சமூக வலை தளங்கள் மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் அதிமுக அரசின் சாதனைகள்,
கொள்கைகள் பற்றி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
ஒரே நாளில் சமூக வலைதளம் மூலம் 12 லட்சம் மக்களை சென்றடைய திட்டம் வகுத்துள்ளனர்


